districts

img

சீர்காழியில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்  

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது.    

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணியளவில் தொழிற்சாலையில் அமைந்துள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாய்லர் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா(வயது25), பல்ஜித்ஓரான்(20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு பகுதி ரகுபதி(53), பந்தநல்லூர் பகுதி மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த ஜாவித்(29) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.    

இதனைகண்ட சக பணியாளர்கள் 3 பேரையும் உடனடியாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

;