districts

img

சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்வு

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் பட்டாசுகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுகளை வாங்க சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.  

இந்த ஆண்டு பல புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதுடன் அதிக தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகள் விலை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

பெரும்பாலும் வடமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தடை விதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை அனுமதிக்கப்பட்டால் பட்டாசுகள் தேங்காது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் முறையாக அனுமதி பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டும் ஆன்லைனில் பட்டாசுகள் வாங்கும்படி பட்டாசு தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

;