சிவகாசி, ஜூன் 7- சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஸ்வநத்தம் பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம், தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவு கொடிக் கம்பம் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். ஜி.மோகன்ராஜ் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா விளக்கிப் பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மேலும் இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன், ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாண்டி, ஆர்.சுரேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துராஜ் வாலிபர் சங்க நிர்வாகி பாண்டீஸ்வரன், கிளைச் செயலா ளர் கௌரி மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக புயல் கலைக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.