districts

img

சிறுவனின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை அகற்றிய சிவகங்கை அரசு மருத்துவர்கள்

சிவகங்கை, பிப்.28-  சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த பேட்டரியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு பெண் ஒருவர் தனது மகனுக்கு 1 மணி நேரமாக மூச்சு திணறல் உள்ளதாக கூறி அனுமதித்துள்ளார்.  சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கழுத்து பகுதியில் வட்ட வடிவிலான ஒரு பொருள் இருப்பதாக தென்பட்டது. அதன் பிறகு கூர்ந்து ஆரா ய்ந்ததில் சிக்கி இருந்தது பேட்டரி என தெரிய வந்தது.  இதையடுத்து, காது மூக்கு தொண்டை பிரிவு தலைவர் மரு. நாக சுப்ரமணியன், உதவி பேராசியர் மரு.ஜிம் திவாகர், மயக்க மருந்து நிபுணர் மரு. ரமேஷ், குழந்தைகள் மருத்துவர் மரு.வினிபிரட் திறவியா ஆகியோர் சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பேட்டரியை அகற்றினர்.  இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிறு வனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்து வர்களை பாராட்டினார்.