சிவகங்கை, ஜூன் 6- சிவகங்கை மாவட்டம் மடப்புரம் விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்தி ருக்கும் மதுபான பாரை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை நடைபெற்றது. மதுபான பார் அமைந் துள்ள பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு மாணவர் விடுதி உள்ளது. பார் வழியாக மடப்புரம் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர் கள் செல்கின்றனர். மே 1-ஆம் தேதி மடப்புரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பாரை அகற்றக்கோரி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள் ளது. மாவட்ட ஆட்சியரிட மும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாரை அகற்றக் கோரி திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் வீரபாண்டி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் சக்தி வேல், ஜெயராமன், சாந்தி, ஈஸ்வரன், ரவி, நீலமேகம், சின்னக்கருப்பன், கண்ணன், வசந்தி, சேதுராமன், செந்தி வேல், ராஜா, ராஜேந்தி ரன் உட்பட 200-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.