சிவகங்கை, மார்ச்.22- சிவகங்கை மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் மாவட்டத் தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட் டப் பொருளாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட தலைவர் மணி கண்டன் நமது செய்தியாளரிடம் கூறிய தாவது: தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத் திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்காலத்தில் எஸ்எப்சி நிதி மாதம்தோறும் ரூ.60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வந்தது. ஆனால், அதன் பின்பு பொறுப்பேற்ற அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் கடந்த பத்து ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. கடந்த இரண்டு மாத காலமாக எஸ்எப்சி நிதி ஊராட்சி நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக ஊராட்சி நிர்வாகத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பத்திரப்பதிவு அலுவ லகம் மூலமாகவும் கனிம வளத்துறை மூலமாகவும் நிதி ஆதாரங்கள் நேரடி யாக வந்துகொண்டிருந்தது. அந்த நிதி யும் நேரடியாக ஊராட்சி நிறுவனத் துக்கே வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது மைன்ஸ் நிர்வா கம் பத்திரப்பதிவு அலுவலகம் மூலமாக வரக்கூடிய நிதி உள்ளாட்சி நிர்வாகத் துக்கு நேரடியாக அனுப்பப்படாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புகின்ற னர்.
மாவட்ட நிர்வாகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி நிர்வாகம் திட்டங்களை வகுத்து திட்டங்களை செயல்படுத்துகின்றனர். கனிம வளத்துறை மூலமாகவும் பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் வரக்கூடிய நிதி களை மாவட்ட உள்ளாட்சி நிர்வாகம் அவர்களே திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறார்கள். இவற்றை மாவட்ட ஆட்சித்தலை வர் விசாரணை செய்து இது போன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் செயல்படுத்த விடாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தின் நல்லதொரு நிர்வாகமாக செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சர் தலையிடவேண்டும். கிராமசபை கூட்டங்களில் மக்கள் முன்வைக்கிற திட்டங்களை செயல்படுத் துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநரிடம் கேட்டபோது, கிராமசபை கூட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதேபோன்று எஸ் எப் சி நிதி சரியான காலத்தில் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.