சிவகங்கை, டிச.31- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகுடி கிராமத்திற்கு புதிய நகர் பேருந்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். மானாமதுரை யில் இருந்து முத்தனேந்தல் வழியாக சிறுகுடிக்கு காலை 8 மணிக்கு ஒரு நகரப் பேருந் தும், காலை 11 மணியள வில் சிறுகுடியில் இருந்து இடைக்காட்டூர், பாப்பான் குளம், பெரிய கோட்டை வழி யாக சிவகங்கைக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படு கிறது. இந்த நகர பேருந்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார் தொடங்கி வைத்தார் இவ்விழாவில் சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவி பஞ்ச வர்ணம், ஒன்றிய கவுன்சிலர் கள், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.