சிவகங்கை, மார்ச் 28- சிவகங்கை நாலுகோட்டையை அடுத்த அண்ணாநகர் சி.காலனி காட்டுப் பகுதி யில் பரவலாக கற்கள் காணப்படுவதாக தம றாக்கி மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தேவி அவர்கள் சிவகங்கை தொல் நடைக் குழுவிற்கு தகவல் கொடுத்துள் ளார். இதையடுத்து புலவர் கா. காளிராசா, தலைவர் நா. சுந்தரராஜன், செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வு குறித்து தொல்நடைக்குழுவினர் கூறியதாவது: நாலுகோட்டை பகுதியை ஒட்டியுள்ள ஓ.புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் சி காலனி பகுதியில் நாலு கோட்டை யில் இருந்து பேரணி பட்டிக்கு செல்லும் சாலையில் வெட்டிக்கினத்தான் மேட்டுப் பகுதியில் கிழக்கே பெரியாறு கால்வாய்க்கு வடக்கு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங் கள் சிதைவுறாமல் காணக்கிடைத்துள்ளன. பெருங்கற்காலக் காலங்களில் பெரிய பெரிய கற்களை வட்டமாக அடுக்கி வைத்து அதன் உள்பகுதியில் இறந்தவர்களை அல்லது அவர்களது எலும்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உள்ளே வைத்து புதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இங்கு கண்டறியப் பட்டுள்ள பெரிய கற்கள் 3500 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.
இரண்டடுக்கு கல்வட்டம்
இங்குக் காணப்படும் கல்வட்டங்களில் ஒன்றில் மட்டும் இரண்டு அடுக்காக கல் வட்டம் உள்ளது. இது மற்ற கல்வட்டங்க ளில் இருந்து வேறுபட்டு இருப்பதால் அப்பகுதியில் வாழ்ந்தவர்களில் தலைமை யானவருக்காக எடுக்கப்பட்டதாக இவ் வடுக்கு கல்வட்டத்தை கருத வாய்ப்பு உள்ளது. பெருவாரியான கல்வட்டங்கள் மலைக் கல்லான வெள்ளைக் கல்லிலே இருக்கிறது ஆனாலும் ஓரிரு இடங்களில் மட்டும் செம்புராங்கல்லினாலான கல்வட்டங் களையும் பார்க்க முடிகிறது.
இரும்பு உருக்கு எச்சங்கள்
.இப்பகுதியில் இரும்பு உருக்கு எச்சக் கழிவுகளையும், இரும்பு போன்ற கற்களை யும் காணமுடிகிறது. 4,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இரும்பு பயன்பாடு இருந்ததை ஐங்குன்றம் மயி லாடும்பாறை அகழாய்வு உறுதிப்படுத்தி யுள்ளது
கற்காலக்கருவி
இப்பகுதியில் கற்காலக் கருவி ஒன்றும் கிடைத்துள்ளது. இது இரண்டு பக்கங்களி லும் துளை உடையதாக உள்ளது. கருவி யின் சுற்றுப்பகுதிகள் நன்கு பயன்படுத்தப் பட்டு தேய்ந்து உள்ளதைக் காணமுடி கிறது. இக் கருவி சுத்தியல் போல உடைப்ப தற்காகவோ, வேட்டை விலங்குகளை நுட்ப மாக எறிவதற்காகவோ, வேறு பயன் பாட்டுக்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்க லாம்.
குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள்
கல்வட்டங்கள் முன்நாளில் இப்பகுதி யில் பரவலாக இருந்துள்ளன. விவசாய நிலப்பகுதிகளாக மாற்றப்படும் பொழுது கல்வட்டங்களில் இருந்த கற்களை கட்டு மானம் மற்றும் வேறுபயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றவை போக மீதி கற்கள் ஒதுக்கி குவித்து வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இந்தத் தகவலை தொல்நடைக் குழு விற்கு தெரிவித்த ஆசிரியர் தேவி இம்மாதம் மதுரையில் நடைபெற்ற அரசு ஆசிரியர் களுக்கான தொல்லியல் பயிற்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.