சிவகங்கை, பிப்.15- சிவகங்கை மாவட்டம் சாக் கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலை வியாக தேவி மாங்குடி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிப்ரவரி 15 அன்று பொறுப்பேற்றுக் கொண் டார். சங்கராபுரம் ஊராட்சியில் தேர்தல் நடந்து போட்டியிட்ட இரு வரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் சான்றி தழ் வழங்கினர். முதலில் தேவி மாங்குடிக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கினர். பின்னர் பிரியதர்ஷினி ஐயப்பனுக்கு சான்றிதழ் வழங்கி னர். இப்பிரச்சனை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தில் தேவி மாங்குடி வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் மூன்று ஆண்டு களுக்கு பின்பு தேவி மாங்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.இவர் காரைக் குடி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியின் மனைவி ஆவார்.