சிதம்பரம், ஜூன் 26- சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற வருவாய் தீர்வா யத்தில் சிதம்பரம் நகரத்திற் குட்பட்ட பெல்கம் சத்திர அம்மணி அம்மாள் இடத் திற்கு உட்பட்ட எம் ஜி ஆர் நகரில் குடியிருக்கும் பொது மக்கள் சிபிஎம் தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த 1960 ஆண்டுகளில் இருந்து அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தரை வாடகை கட்டிக் கொண்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர். வெல்கம் அன ந்தம்மாள் தர்மசத்தரத்தின் தர்மகர்த்தா என கூறிக் கொண்டு தற்போது உள்ள வர்கள் தரை வாடகை வசூ லிக்காமல் அப்பகுதியில் உள்ளவர்களை காலி செய்யும் நோக்கில் நடந்து கொள்கிறார். மேலும் மேல வீதியில் உள்ள பெல்கம் ஆனந்தம்மாள் தர்ம சக்க ரத்தை வணிக வளாகமாக மாற்றியுள்ளார்.
எனவே இந்த இடத்தை இந்து அற நிலைத்துறை கையகப் படுத்தி அப்பகுதியில் குடி யிருக்கும் மக்களிடம் தர வாடகை வசூலிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென அந்த மனுவில் குறிப்பி ட்டுள்ளனர். இதே போல் சிதம்பரம் கனக சபை நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் 40 ஆண்டுகளாக குடியி ருந்து வரும் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தி னருக்கு மனைபட்டா வழங்க வும் மனு அளித்துள்ளனர். இந்நிகழ்வில் சிபிஎம் நகர செயலாளர் ராஜா நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக் குமரன் எம்ஜிஆர் நகர் குடி யிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகி கலியமூர்த்தி, குமார், சின்னையன், சுந்தர மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.