சிதம்பரம், பிப். 25- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 5ஆவது வார்டில் தஸ்லிமா, 33ஆவது வார்டில் முத்துக்குமரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்காக களப்பணியாற்றிய சிபிஎம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு பாராட்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது. நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்து பேசுகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றி கட்சியின் கொள்கையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நகர் மன்றத்தில் அவர்களின் பேச்சுக்கள் அடிதட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கும்பாதுகாக்கும்வகையில் அமைய வேண்டும் என்றார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஜெயசித்ரா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.