சிதம்பரம், ஜூன் 20- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக பரங்கிப் பேட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு பக்ரீத்தை யொட்டி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற விருந்தில் சுமார் 100 தூய்மை பணியாளர் பணி யாளர்கள் கலந்து கொண்ட னர்.குழுமத் தலைவர் தமீம் தலைமை தாங்கினார். குழும செயலாளர் ஹாஜி அலி முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந் தினர்களாக வார்டு கவுன் சிலர்கள் கோ.அருள் முருகன், வேல்முருகன், சமூக ஆர்வலர்கள் பசுமை ஹாஜி, நஜீர் உபைத் துல்லாஹ், அப்துல் காதர் மதனி, துப்பரவு ஆய்வாளர் வீரானாந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மம் செய்வோம் குழு நிர்வாகிகள் மற்றும் களப் பணியாளர்கள் மலை நடராஜ், நபில், அஸ்லம், உசேன், அப்துல் ரஜாக், ஹாஜா உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.