உடுமலை, ஏப்.1- பிஏபி திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டலத் தில் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் கூடு தலான நாட்கள் தண்ணீர் திறக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளார்கள். கோடை காலம் தொடங்கிய நிலை யில், பாசன பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விளை நிலங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பது இல்லை. விளை நிலங்கள் பயன்பெறும் வகையில், கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், மூன்றாம் மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்க ரும், திருப்பூர் மாவட்டத்தில் 71 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறு கிறது. கடந்த மாதம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண் ணீரை நம்பி விவசாயிகள், மக்காச் சோளம் உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால், ஒரு மணி நேரத்திற்கு நிலங்களில் பாய வேண்டிய தண் ணீரின் தேவையும் அதிகமாக உள்ளது. அறுவடைக்கு குறுகிய காலமே உள்ள தால் மூன்றாம் மண்டலத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே விவ சாயிகள் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்றனர்.