பென்னாகரம், செப்.16- மார்க்சிய அறிஞர் தேவ.பேரின் பனின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததானம் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மார்க்சிய அறிஞரு மான தேவ.பேரின்பனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி, ரத்ததானம் முகாம் நடை பெற்றது. முகாமிற்கு மாவட்டப் பொருளாளர் எம்.சிலம்பரசன் தலைமை ஏற்றார். ரத்ததான முகாமை பாப்பாரப்பட்டி பேரூ ராட்சி மன்றத் தலைவர் டி. பிருந்தா துவக்கி வைத்தார். பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் வே.விசு வநாதன், மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வே.சக்தி வேல் ரத்ததானம் செய்த தன்னார் வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். இதில், திமுக நகரச் செயலாளர் வி.சண்முகம், மருத்துவர் வெற்றிவேல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத் துவர் கன்யா, சுகாதார ஆய்வா ளர் பிரசாந்த், ஆற்றுப்படுத்துதல் மைய ஆலோசகர் ஃபைரோஸ் கான் மற்றும் மருத்துவக் குழு வினர், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதிகா அன்பரசு, பூங்கொடி மாதேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சரிதா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்கள் சங்கம் செயலாளர் சின்னராஜ், விவ சாயிகள் சங்க நிர்வாகி காமராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.அருள்குமார், நிர் வாகிகள் வேலாயுதம், ரஜினி, முகிலன், பார்த்திபன், ராஜ மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் திரளான இளைஞர்கள் ரத்ததானம் செய் தனர்.