உதகை, டிச.12- கூடலூர் - கேரளா இடையே உள்ள சாலை களை புதுப்பிக்க வலியுறுத்தி கொட்டும் மழையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர். கூடலூரிலிருந்து கோழிக்கோடு, மலப் புறத்துக்கு நெடுஞ்சாலைகள் செல்கிறது. இச்சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக மிக வும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டு மின்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சாலையை புதுப்பிக்க வலியு றுத்தி வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எந் தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில். கூடலூர் - கேரளா சாலை களை புதுப்பிக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேவாலா பஜாரிலி ருந்து பொன்னூர்,
நாடுகாணி, ஆமைக் குளம், மரப்பாலம், கோழிப்பாலம் வழியாக கூடலூர் வரை நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்தனர். அதன்படி ஞாயி றன்று தேவாலா பஜாரிலிருந்து வாலிபர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் சுதர்சன் தலை மையில் மழையில் நனைந்தபடி நடை பயணம் நடைபெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். இதில், வாலிபர் சங்க நிர் வாகிகள் நவ்பல், உஸ்மான், பிரபு, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடைபய ணம் ஞாயிறன்று மதியம் நாடுகாணி பஜாரை அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ் சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் சுப்பிரமணி, செயற்பொறியாளர் சாதிக் உள் ளிட்ட நெடுஞ்சாலைத்துறையினர் வந்து வாலிபர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டிச.17 ஆம் தேதியன்று சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட உள் ளது. தொடர்ந்து மாத இறுதியில் பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொ டர்ந்து நடைபயண போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், உறுதிய ளித்தபடி சாலைகள் புதுப்பிக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.