திருப்பூர், ஏப்.1- எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து வந்த, ஓசூர் பயண குழுவிற்கு திருப்பூரில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் வரவேற்பளித்தனர். எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக தமிழ கம் தழுவிய பிரச்சார பயணம் நடைபெறுகிறது. அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.பாரதி தலைமையில் ஓசூர் பயண குழு திருப்பூர் வருகை தந்தது. இந்த பயண குழுவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். அருள் தலைமையில், மாவட்டச்செயலாளர் செ. மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கே.பாலமுரளி உள்ளிட்ட மாவட்ட நிர் வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி வரவேற்பளித்தனர்.