districts

img

நிரந்தர வேலையைப் பறிப்பதா? திருப்பூரில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 5 - நிரந்தர வேலை வாய்ப்பைப் பறிக்கக்கூ டிய அரசாணை 115, 152 ஆகியவற்றை முழு மையாக கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில அறைகூவல் விடுத்திருந்தது. அதன் படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு திங்களன்று சங்க மாவட்டத் தலைவர்  எஸ்.அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மணி கண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சிக ளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட் டுநர்கள், மேற்பார்வையாளர்கள் போன்ற இதர பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை முழுமையாக கைவிட  வேண்டும், மாநகராட்சிகளில் ஒப்பந்த முறை யில் நீண்ட காலமாக பணிபுரிபவர்களை உட னடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிறை வாக சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், மாவட்ட  குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். மாநிலக்குழு உறுப்பினர் சௌந் தர்யா நன்றி கூறினார்.