districts

img

பேருந்து வசதிகளை முறைப்படுத்த வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.13-  பேருந்து வசதிகளை முறைப்ப டுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து, தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக திருப்பூர் மாவட்ட கமர்சி யல் அலுவலரிடம் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு  ஒன்றிய குழு சார்பாக, வெள்ளியன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது, பெருமாநல்லூர் -  மலையபா ளையம் செல்லும் வழியில் உள்ள கருக்கங்காட்டுபுதூர் மற்றும் லட்சுமி  கார்டன் ஆகிய பேருந்து நிறுத்தத்தில்  காலை மற்றும் மாலை நேரங்களில்  பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர் களுக்கு ஏதுவாக முறையான நேரங் களில் குறிப்பிட்ட கால இடைவெ ளியில் பேருந்து இயக்க கோரியும், மேலும் பேருந்து நிறுத்தத்தை தாண்டிச் சென்று பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விடும் போக்குகினை தடுக்க வேண்டும். பொம்மநாயக்கன்பாளையம், பாண் டியன் நகர், கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிர மத்திற்கு உள்ளாகின்றனர். அவர்க ளுக்கு ஏதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட பேருந்துகளை போயம்பாளையம், பாண்டியன் நகர், பெருமாநல்லூர், அவிநாசி வழியாக கோவை வரை  இயக்க வேண்டும். பூலுவப்பட்டி துவங்கி நெருப்பெரிச்சல், வாவிபா ளையம், பெருமாநல்லூர் வரை 15  க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்க ளும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியும், இரண்டு அரசினர் மேல்நி லைப் பள்ளியும், ஒரு அரசினர் உயர்நி லைப் பள்ளியும் உள்ளது.  

எனவே  பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக  பூலுவபட்டி வாவிபாளையம், அடுக் குமாடி குடியிருப்பு, கணக்கம்பாளை யம், பெருமாநல்லூர் வரை பேருந்து  வழித்தடத்தை  ஏற்படுத்தி பேருந்து  வசதி செய்து வேண்டும். பூலுவப் பட்டி முதல் ஊத்துக்குளி வரை செல் லும் 11 ,11சி, 11/46,55 ஆகிய பேருந்து கள் ஒரே நேரத்தில் இயக்கப்படு கிறது. குறிப்பிட்ட கால இடைவெளி யில் இயக்கினால் அங்குள்ள பெண் கள், மாணவர்கள் மற்றும் முதியவர் களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். பழைய பேருந்து நிலை யத்திலிருந்து ஆத்துப்பாளையம் வழியாக பெருமாநல்லூர் வரை  செல்லும் 27 ஆம் எண்  பேருந்து காலை  நேரம் மட்டுமே இயக்கப்ப டுகிறது. அதனை தொடர்ச்சியாக இயக்கிட வேண்டும்.  மேலும் பேருந் தில் ஏறும் பெண்கள் மற்றும் முதி யோர்கள் மீது கடுமையாக நடந்து  கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்து னர்களுக்கு முறையாக உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க  வேண்டும் என்று மனுவில் குறிப்பிட் டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலை வர் ரேவந்த் குமார், ஒன்றிய செயலா ளர் சந்தோஷ் இசைப்பிரியன், ஒன் றிய குழு உறுப்பினர்கள் இம்ரான், ராஜசேகர், வடக்கு நகர குழு உறுப் பினர் மனோஜ் மற்றும் கிளை நிர்வா கிகள் பங்கு பெற்றனர்.