சேலம், அக்.28- சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநி யோகத்தை தனியாருக்கு வழங்கிய நிர்வா கத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாநகராட்சி 60வார்டுகள் உள்ளன. இதில், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.தற்போது மாநகராட்சியின் குடிநீர் விநி யோகத்தை செகந்திராபாத் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள் ளது. இதனை கண்டித்தும், மாநகராட்சி நிர்வா கமே தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து வசதிகளையும், ஊதி யத்தையும் அரசிடம் பெற்றுக் கொண்டு மக்க ளுக்கு செய்ய வேண்டிய பணிகளில் தனி யாரை புகுத்தி வருவது மக்களை ஏமாற் றும் செயல். எனவே, சேலம் மாநகராட்சி குடி நீர் விநியோகத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஜெகநாதன் தலைமை வகித்தார். முன்னதாக, கோட்டை மைதானத் திலிருந்து பேரணியாக வந்த வாலிபர் சங் கத்தினர் மாநகராட்சி நுழைவாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இப் போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.கார்த்தி, மாவட்ட செயலா ளர் வி.பெரியசாமி, சேலம் கிழக்கு மாநகர உறுப்பினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்க ளும் கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங் கதினரை காவல் துறையினர் கைது செய்த னர்.