districts

img

உங்கள் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு

நாமக்கல், ஏப்.8- இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும்  ஓட்டானது, மோடிக்கு வைக்கும் வேட்டாக அமைய வேண்டும் என வாக்காளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வ ரனை ஆதரித்து நாமக்கல் பூங்கா சாலை யில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர் தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து தற் போது வரை தமிழக முதல்வர் தமிழகத்திற் கும், குறிப்பாக நாமக்கல் மாவட்டத்திற்கும் எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள் ளார். இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை 4 லட்சம் வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண் டும். உங்கள் ஒட்டு மோடிக்கு வைக்கும் வேட் டாக இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத் தில் மட்டும் இதுவரை 8 கோடி மகளிர்  இலவச பேருந்து பயணம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசின் காலை உணவு திட் டத்தை பின்பற்றி, ஆந்திரா, தெலுங்கானா  கனடா நாட்டில் இதனை அமல்படுத்தியுள்ள னர். மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 80 சதமான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகி றது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத தகுதியான மகளிருக்கு உறுதியாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் படும். மொழி உரிமை, கல்வி உரிமை என  அனைத்து உரிமைகளும் காக்க நீங்கள் இந் தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என் றார். இக்கூட்டத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ,  விசிக, காங்கிரஸ், தமிழ் புலிகள் அமைப்பி னர், மதிமுக உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரியில் உதயநிதி பரப்புரை தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவருக்கு உதயசூரியன் சின் னத்தில் வாக்குகேட்டு தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகே திமுக இளைஞ ரணி செயலாளரும், அமைச்சருமான உத யநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட் டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, சி.பழனியப்பன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கே.தருண், நகரச் செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தாமரைச்செல்வன், எம்.ஜி.சேகர்,  வர்த்தகர் அணி மாநில துணைச்செயலாளர் தர்மசெல்வன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றியச் செய லாளர்கள் சேட்டு, ஏ.எஸ்.சண்முகம், வைகுந் தம், மல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் த.கு.பாண்டியன் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.