காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் காட்டு மரங்களை நீரிலி ருந்து இழுத்து கரைக்கு கொண்டு வரும் ஆபத்தான பணியில் மேட்டுப் பாளையத்தை சேர்ந்த உள்ளூர் இளை ஞர்கள் சிலர் இறங்கியுள்ளனர். தமிழக கேரள எல்லையோரம் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ள மலை முகட்டில் அமைந்துள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள பில்லூர் அணை. கேரள மற்றும் நீலகிரி மலைக்காடு களை நீர்ப்பிடிப்பு பகுதிகளை கொண் டுள்ளது. 100 அடி நீர்தேக்க உயரம் கொண்ட இந்த அணை என்றுமே முழு மையாக வற்றியதில்லை என்பதே இதன் தனி சிறப்பு. கோடை காலங்க ளில் சிறுவாணி அணை வற்றினாலும் கோவை மாவட்டத்தில் பல லட்சம் மக்களுக்கு தொடர்ந்து குடிநீரை பில் லூர் பில்லூர் அணை வழங்கி வருகி றது. மனித நடமாட்டம் சாத்தியமில் லாத மலைகாடுகளில் பெய்யும் மழை நீர் கீழ் நோக்கி வழிந்தோடி அணையை அடைவதால் அணையின் நீர்மட்ட அளவு எப்போதுமே எழுப டிக்கு கீழாக குறைவதேயில்லை. கனமழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் போல் காடுகளின் வழியே அருவிகளாய் கொட்டி பாய்ந்து வரும் தண்ணீர் வழியில் உள்ள காட்டு மரங் களை சாய்த்து இழுத்துக்கொண்டு பில்லூர் அணையை வந்தடையும். இதனால் அணையில் தேக்கப்படும் தண்ணீரில் பெருமளவு சிறியது முதல் பெரிய மரங்களின் கிளைகள் வரை அடைத்துக்கொண்டு நிற்கும். தொடர் மழையால் அணையின் நீர்வரத்து அதி கரித்து அதன் முழு கொள்ளளவை எட் டும் போது அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறக் கப்பட்டு உபரி நீர் வெளியேற் றப்படும். அப்போது அணையை அடைத்து கொண்டு தேங்கி நிற்கும் மரங்களும் நீரோடு சேர்ந்து பவானி யாற்றில் கலந்து பாய்ந்து செல்லும். மலைமுகட்டின் மீதுள்ள பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீர் கீழ் நோக்கி மிகுந்த வேகத்துடன் காட்டாறு போல் பாய்ந்து மேட்டுப்பாளையம் நகரின் வழியே கடந்து செல்லும்.
தற்போதும் வியாழனன்று முதல் பில்லூர் அணையின் நான்கு மதகுகள் திறக்கப்பட்டு அதன் நீர்வரத்தான வினாடிக்கு 20 ஆயிரம் முதல் 28 ஆயி ரம் கனஅடி வரை அப்படியே பவானி யாற்றில் திறந்து விடப்பட்டு வருகி றது. ஏற்கனவே பவானி ஆற்றின் நீர்பி டிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஆற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலை யில், அணையின் உபரிநீரும் இதில் வெளியேற்றப்பட்டு வருவதால் பவா னியாற்றில் வெள்ளம் கரைபுரள்கி றது. இதனால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டு, வருவாய் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஒலி பெருக்கி மூலம் ஆற்றில் யாரும் இறங் கவோ, மீன்பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். வெள்ள அபாயம் கருதி கரையோ ரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு இடம் மாற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், உள்ளூரை சேர்ந்த சிலர் இந்த எச்சரிக் கைகளை பொருட்படுத்தாமல் ஆற்று நீரில் அடித்து வரப்படும் மரக்கட்டை களை சேகரிக்கும் ஆபத்தான பணியை செய்து வருகின்றனர். ஆற் றோரம் நீண்ட கம்புகளுடன் நிற்கும் இவர்கள் அதன் முனையில் கட்டியுள்ள வளைந்த அரிவாளின் உதவியோடு நீரில் மிதந்து செல்லும் மரக்கட்டைகளை இழுத்து கரைக்கு கொண்டு வருகின்றனர். இழுக்க முடி யாத சற்று பெரிய மரங்கள் வந்தால் காட்டாற்று வெள்ளத்தில் குதித்து நீரின் போக்கில் சென்று அதனை இழுத்து வருகின்றனர். சிறு கட்டைகள் விறகுகளாகவும், பெரிய மரங்கள் மர அறுவை ஆலைக ளுக்கும் விற்கப்பட்டு விடுகின்றன. இதில் லாபம் கிடைப்பதால் உயிரை பணையம் வைத்து இப்பணியில் இறங்குகின்றனர் உள்ளூரை சேர்ந்த சில இளைஞர்கள். பணம் வேண்டும் தான் ஆனால் உயிரும் வேண்டுமே. வெள்ளபெருக்கு காலங்களில் இது போன்ற ஆபத்தான செயல்களை கட்டுபடுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க வருவாய் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
சரவணபாபு, மேட்டுப்பாளையம்