districts

img

இளைஞர்களுக்கு வேலையில்லை; ஓய்வூதியருக்கு மீண்டும் வேலையா?

அரசு போக்குவரத்து நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ. 7 - தமிழகத்தில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், ஓய்வு பெற்றோருக்கு மீண்டும் வேலை தரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர் வாகத்தைக் கண்டித்து திருப்பூரில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. திருப்பூர்- காங்கேயம் கிராஸ் அரசுப் போக்குவரத்துப் பணி மனை முன்பாக செவ்வாயன்று போக்குவரத்து ஊழியர் சங்கங்க ளின் ஆர்ப்பாட்டம் எல்பிஎப் மண்ட லத் தலைவர் சென்னியப்பன் தலை மையில் நடைபெற்றது. இதில் அரசுப் பேருந்தைத் தனியார்மய மாக்கும் தமிழக அரசின் முயற்சி யைக் கண்டித்தும், போக்குவரத்து ஊழியர்களின் சம்பளப் பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தியும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக் கும் நிலையில், ஓய்வு பெற்றோ ருக்கு வேலை தருவதைக் கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு போக்குவரத்து ஊழி யர் சங்க மண்டலப் பொதுச் செயலா ளர் பி.செல்லதுரை, ஏஐடியுசி ஊட்டி சங்கப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம், தொமுச மண்டலப் பொதுச் செயலாளர் கே.துரைசாமி மற்றும் விசிக சார்பில் ஜெ.துரை சாமி ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவ ரத்துத் தொழிலாளர்கள் பெருந் திரளானோர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர். நிறைவாக சிஐடியு மண்டல துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.