திருப்பூர், ஏப்.15- பிரதமரால் 2022 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசு வழங்கப்பட உள்ளது. காந்திய வழியில் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி, ஏழை மக்களின் துயர்களை போக்கும் தனிநபர், குழுமங்கள் இப்பரிசுக்காக விண்ணப்பிக்கலாம். சிக்கண்ணா கல்லூரியில் செயல்படும் மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெற் றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், திருப்பூர் என்கிற முகவரிக்கு, ஏப்.20 ஆம் தேதிக்குள் மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.