சேலம், ஏப்.1- பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் - யஷ் வந்த்பூர் விரைவு ரயில் வரும் ஏப்.6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, பெங்களூரு பையப்பன்ஹள்ளி பகுதி யில் நடைபெறும் ரயில்வே பராமரிப்புப் பணிகள் கார ணமாக, சேலம் - யஷ்வந்த் பூர் இடையேயான ரயில் திங்களன்று (நேற்று) முதல் ஏப்.5 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில், யஷ்வந்த்பூர் - சேலம் இடையேயான ரயில் சேவை வரும் ஏப்.2 ஆம் தேதி (இன்று) முதல் ஏப்.6 ஆம் தேதி வரை ரத்து செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனிடையே, சென்னை சென்ட்ரலில் நடை பெறும் பராமரிப்புப் பணி கள் காரணமாக, அங்கி ருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாயன்று (இன்று) சென்ட்ரலுக்கு பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில், ஈரோட்டிலி ருந்து சென்னை சென்ட்ர லுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செவ்வா யன்று (இன்று) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படாது. இதேபோல், ஆலப்புழா - சென்னை இடையேயான விரைவு ரயில் செவ்வா யன்று (இன்று) திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப் படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.