districts

img

எழுத்தாளர் க.பொ.கந்தசாமி படத்திறப்பு விழா

நாமக்கல், ஜன.23- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் எழுத்தாளருமான மறைந்த தோழர் க.பொ. கந்தசாமி அவர்களின் படத்திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டத்தில் இடதுசாரி இயக் கத்தை வலுப்படுத்துவதிலும், மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதிலும் முன்னனியில் நின்ற வர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக வும், இடதுசாரி கருத்துக்களை எளிய உழைக் கும் மக்களிடம் சேர்க்கும் வகையில்,  தர்ம பவன காவல்காரன், இருதாய் பெற்ற ஒரு மகள், ஒன்பது மணி வாத்தியார் உள்ளிட்ட சிறுகதை, நாவல்களை எழுதியவர். வாழ் நாளில் இறுதிவரையில், உழைக்கும் மக்க ளின் விடியலுக்கான தத்துவத்தை உயர்த்திப் பிடித்தவர் அண்மையில் காலமானார். இவ ரின் படத்திறப்பு ராசிபுரம் பட்டணத்தில் நடை பெற்றது.  ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு ராசிபுரம் புதுசத்திரம் பிரதேச குழு செயலாளர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கினார். மருத்துவர் பாரதி கந்தசாமி வர வேற்புரையாற்றினார்.

இதில், தமுஎகச மாநி லத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரு மான மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று, மறைந்த தோழர் கந்தசாமியின் படத்தை திறந்து வைத்து, உரையாற்றினார்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, எஸ்.தமிழ் மணி, ராசிபுரம் வடக்கு ஒன் றிய செயலாளர் கோ.செல்வராசு, மூத்த தலை வர்கள் எம்.ஜி.ராஜகோபால், யூ.பெருமாள், தமுஎகச மாவட்ட தலைவர் காந்தி சரவணன், கல்வி சிந்தனையாளர்கள் மன்ற தலைவர் கே.எ.சந்தராவ், டாக்டர் கேப்டன் சதாசிவம், டாக்டர் சாய் சுதா மற்றும் செந்தில்குமார், பழ னிச்சாமி விவேகானந்தா கல்லூரி முதல்வர் அ.மோகனசுந்தரம், ரக்ஷனா, குட்டி, தாரணி உள்ளிட்டோர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினர்.  முன்னதாக இந்நிகழ்வில், மறைந்த தோழர் கந்தசாமியின் இணையர் பழனியம் மாள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திர ளானோர் பங்கேற்றனர். முடிவில், வி.மிரு ணாளினி நன்றி கூறினார். இடதுசாரி சிந்தனை யாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தோழர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ் வில் பங்கேற்றனர்.