உலக பூமி தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் நகராட்சி தலைவர் சியமாளா நவநீதகிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்விற்கு பொள்ளாச்சி நகர்நல அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
மேலும், இதில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை பொறுப்பாளர் இரா,நவநீதகிருஷ்ணன் மற்றும் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.