districts

img

திருப்பூரில் உலக புத்தக தின விழா சிறப்பு புத்தக விற்பனை தொடக்கம்

திருப்பூர், ஏப். 22 - உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூரில்  இரண்டு நாள் சிறப்பு புத்தக  விற்பனையை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் கே.ஆர்.சி.சிட்டி  சென்டர் வளாகத்தில் சனி யன்று பின்னல் புத்தகாலயம்,  தமுஎகச மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார் பில் இரண்டு நாள் சிறப்பு புத்தக விற்பனை அரங்கம் தொடங்கப்பட்டது. இங்கு  அனைத்து புத்தகங்களுக்கும் 25 சதவிகிதம்  தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன்  தலைமை வகித்தார். இதில் திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பங் கேற்று புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர்  ஆர்.பாலசுப்பிரமணியம், சைமா பொதுச்  செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன்,  அகில இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசி யேசன் துணைத் தலைவர் கே.குமாரசாமி, நேஷனல் சில்க்ஸ் கே.ஏ.கே.சீனிவாசன், டிகேடி கல்விக்குழுமம் காதர்கான், தமுஎகச மாவட்ட தலைவர் பி.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளர் ஆர் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். தொடக்க விழா நிகழ்வில்  பங்கேற்றோருக்கு பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார். முதல் நாளிலேயே சுமார் ரூ.30 ஆயிரம்  மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இந்த புத்தக விற்பனை நடைபெறுகிறது.