districts

img

தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்

ஈரோடு, ஜன. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவ ரான தோழர் எம்.என்.காளியண்ணனின் 28ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி அந்தியூர் மற்றும் பவானி தாலுக்காவில் நடைபெற்றன. ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த  பெரியார் மாவட்டத்திற்குட்பட்டது பவானி தாலுக்கா. இந்த  வட்டாரத்திற்குட்பட்ட அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் உழைப்பாளி மக்கள், விவசாயிகள், விவசாய தொழி லாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் போராடியவர் தோழர் எம்.என்.காளியண்ணன். இவரது 28ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.  அந்தியூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், கட்சியின் தாலுகாச் செயலா ளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து மற்றும் இடைக்கமிட்டி உறுப் பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று, பவானி வட்டம், ஒரிச்சேரி, ஆ.புதுப்பா ளையம், ஓசைபட்டி, கூலிவலசு, சுக்கா நாயக்கனூர் மற்றும்  கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்.என்.காளி யண்ணனின் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நி கழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.பி. பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெகநாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோழர் எம்.என்.காளி யண்ணன் நினைவு தின பொதுக்கூட்டம் கீழ்வாணியில் இன்று  (18.1.2024) நடைபெறுகிறது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.