districts

img

விவசாயிகள், தொழிலாளர்கள் திருப்பூரில் வாகன பேரணி

திருப்பூர், ஜன.27- டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் முடிவில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஐக்கிய  விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று வாகன பேரணி நடைபெற்றது. மூன்று வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் முடிவில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண் டும்.  தொழிலாளர் விரோத கொள்கைகளை  கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில்  குடியரசு தினத்தையொட்டி வாகன பேரணி  நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன் னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் வெள்ளியன்று அவினாசி சாலை, காந்தி நகர் பேருந்து நிறுத் தம் முதல் திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யம் வரை டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன  பேரணி நடைபெற்றது. இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கதி னரும், ஐக்கிய விவசாய முன்னணி சங்கங் களை சேர்ந்த விவசாயிகளும், டிராக்டர் மற் றும் 400 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்க ளில் பேரணி நடத்தினர்.   இதையடுத்து நடைபெற்ற விளக்க கூட் டத்திற்கு எல்.பி.எப் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் சார்பில் ஆர்.குமார், சிஐடியு சார்பில்  டி.குமார்,  ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பி.ஆர். நடரா ஜன், எம்.எல்.எப். சார்பில் சம்பத்,  ஹெச்.எம். எஸ். சார்பில் முத்துசாமி, ஐ.என்.டி.யு.சி நிர் வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.