districts

img

திருப்பூர் மாவட்டத்தில் 23.19 லட்சம் வாக்காளர்கள்

திருப்பூர், நவ. 9 - திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் புதன்கிழமை எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் 2023 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த வாக்கா ளர்கள் சேர்க்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்துடன் எட்டு தொகுதிகளுக்கும் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் எண்ணிக்கையும் வெளி யிடப்பட்டது. தொகுதி வாரியாக வாக்காளர்கள் தாராபுரம் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயி ரத்து 313 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் உள்பட மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545 பேர் ஆவர். இந்த தொகுதியில் மொத்த வாக்குச்சாவடி கள் 298. காங்கேயம் தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553 பேர், பெண்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551 பேர், மூன்றாம் பாலினத்தார் 21 பேர் உட்பட மொத்த  வாக்காளர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125  பேர். இத்தொகுதியில் மொத்தம் 295 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவிநாசி தனி தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394  பேர், மூன்றாம் பாலினத்தார் 4 பேர் என மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 76 ஆயி ரத்து 698 பேர் உள்ளனர். இந்த தொகுதியில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 313. திருப்பூர் வடக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540 பேர், மூன்றாம் பாலினர் 140 பேர் உட்பட மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298 பேர் உள்ளனர். வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 374. திருப்பூர் தெற்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874  பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயி ரத்து 874 பேர், மூன்றாம் பாலினர் 35 பேர் உள்பட மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 67  ஆயிரத்து 783 பேர் உள்ளனர். இத்தொகு தியில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 242.

இந்த மாவட்டத்திலேயே அதிக வாக்காளர் கொண்ட பெரிய தொகுதியாக பல்லடம் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379 பேர், பெண் வாக்காளர்கள் 1  லட்சத்து 94 ஆயிரத்து 38 பேர், மூன்றாம் பாலினர் 69 பேர் என மொத்த வாக்காளர் கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486 பேர் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்த வாக்குச் சாவடி கள் எண்ணிக்கை 410 ஆகும். உடுமலைபேட்டை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து  632 பேர், பெண் வாக்காளர்கள் 1லட்சத்து 35 ஆயிரத்து 633 பேர், மூன்றாம் பாலினர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290 பேர் உள்ளனர். வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 294. மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி யில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1  லட்சத்து 15 ஆயிரத்து 854 பேர், பெண் வாக்கா ளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120 பேர், மூன்றாம் பாலினர் 20 பேர் என மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். இந்த தொகுதியில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 287.

ஆக திருப்பூர் மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர். மொத்த பெண் வாக்காளர்கள் 11  லட்சத்து 76 ஆயிரத்து 463 பேர் மற்றும் மூன்றாம் பாலினர் 324 பேர் என 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் பெண் வாக்கா ளர் எண்ணிக்கை ஆண் வாக்காளர் எண்ணிக் கையை விட 34 ஆயிரத்து 31 பேர்அதிகம் உள்ளனர். இத்துடன் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர தாராபுரம், காங்கேயம், அவிநாசி, பல்லடம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தொகு திகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து சட்டபேரவை தொகுதிகளுக்கும் உட்பட்ட மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர் /  கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட் சியர் அலுவலகங்கள், மண்டல அலுவல கங்கள், வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் பார்வைக்காக வைக்கப் பட்டிருக்கும்.

வாக்காளர் சிறப்பு முகாம்

தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணைய அட்டவணைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கி டையே டிசம்பர் 8ஆம் தேதி வரை பெயர்  சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு வாக்காளர்கள் மனுக்கள் அளிக்கலாம். இதற்காக நவம்பர் 12, 13 மற்றும் 26, 27  ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறு கிறது. இதில் 2023 ஜனவரி முதல் தேதியில் 18 வயது பூர்த்தி அடைய இருக்கும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப் பிக்கலாம். அதேபோல் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதம் முதல் தேதியில் 18  வயது பூர்த்தி அடைய இருப்போரும் புதிய வாக்காளராக சேர படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். அந்த படிவங்கள் சேகரித்து வைக்கப்பட்டு அந்தந்த காலாண்டின் (ஏப், ஜூலை, அக்.,) தொடக்கத்தில் வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள் ளார். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட வருவாய் அலுவ லர் ஜெய்பீம், தேர்தல் வட்டாட்சியர் தங்க வேல் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற் றனர்.