districts

img

“எந்த நிகழ்விலும் பாலின பேதம் பார்க்கக்கூடாது” இறுதி நிகழ்வில் சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்

சேலம், மார்ச் 6- மேட்டூர் அருகே உயிரிழந்தவரின் சடலத்தை தகனமேடை வரை பெண் கள் சுமந்து சென்று எரியூட்டி, எந்த நிகழ்விலும் பாலின பேதம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை ஆழமாக முன் வைத்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது உக் கம்பருத்திக்காடு. இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து, பெரி யார் கொள்கை வழியில் வாழ்ந்து வரு கின்றனர். இந்நிலையில், இக்கிராமத் தைச் சார்ந்த செல்லமுத்து என்பவர் வயது மூப்பு காரணமாக புதனன்று உயிரிழந்தார். வழக்கமாக நடை பெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து, இவரது உடல் தகனம் செய்யப்பட் டது. வழக்கமான இறுதி ஊர்வலத் தில் ஆண்களே முன்னின்று நடத்துவ தோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திவிடுவார்கள். இதற்கு மாறாக செல்லமுத்துவின் இறுதி ஊர் வலத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தி னர். இறந்தவரின் உடலைப் பெண் கள் சுமந்து முன்னே செல்ல, ஆண் கள் அவர்களுக்கு பின்னால் அணி வகுத்துச் சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில், அங்கு நடமாடும் தகன மேடை (எரிவாயு மூலம் சட லத்தை சாம்பலாக்கும் மேடை) தயார் நிலையில் வைத்திருந்தனர். இதன் பின் இறுதி வணக்கம் செலுத்தி, உடலை தகனமேடையில் வைத்து எரி யூட்டினர். எந்த நிகழ்விலும் ஆண், பெண்  என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது  என்ற பெரியார் கொள்கைப்படி, பெண் களும் இறுதி நிகழ்வில் பங்கேற்க லாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப டுத்துவதற்காக பெண்களை ஊர்வ லத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் சென்ற தாக அந்த கிராமத்தினர் தெரிவித்த னர்.