districts

மகளிர் உரிமைத்திட்டம்: டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்

திருப்பூர், ஜூலை 19 - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு டோக்கன், விண்ணப்பப் படிவம் திருப்பூர் மாவட்டத்தில் வியாழனன்று (இன்று) முதல் நான்கு நாட்க ளுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர் கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புத னன்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட் டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை  சிறப்பாக செயல்படுத்த விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1135  ரேசன் கடைகள் உள்ளன.

இதில் 1113 மையங் களில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு நடைபெறும். இரண்டு கட்டங்களாக விண்ணப்பப் பதிவு நடைபெறும். முதல் கட்டமாக திருப்பூர் மாநகராட்சி யில் முதலாவது, இரண்டாவது மண்டலங்க ளில் உள்ள 30 வார்டுகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சி களில் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட்  4 ஆம் தேதி வரை மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு நடைபெறும். நியாயவிலைக் கடைகளுக்கு அருகில்  உள்ள அரசு கட்டிடங்களில் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்படும். முன்னதாக வியா ழனன்று (இன்று) முதல் 23ஆம் தேதி வரை  நான்கு நாட்கள் வீடு, வீடாக மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக் கன்  நியாயவிலைக் கடை விற்பனையாளர் கள் மூலம் வழங்கப்படும். குடும்ப அட்டை களில் உள்ள முகவரிகளுக்குத்தான் விண் ணப்பம், டோக்கன் வழங்கப்படும். எனவே பொது மக்கள் யாரும் மகளிர் உரிமை திட்ட  விண்ணப்பம் பெறுவதற்காக நியாயவிலைக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வீடுகளில் வந்து கொடுக்கப்படும் டோக் கனில் முகாமிற்கு வர வேண்டிய தேதி, நேரம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த தேதி, நேரத் தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட  சான்று ஆவணங்களின் நகல்கள் தேவை யில்லை. முதல் கட்ட முகாமில் பங்கேற்க  குறிக்கப்பட்ட தேதி, நேரத்தில் வர இயலாத வர்கள் ஆகஸ்ட் 3, 4 தேதிகளில் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இரண்டாவது கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி முடிய நடைபெறும். இதில் திருப்பூர் மாநகராட்சி மூன்று மற்றும் நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட 30 வார்டுகள், உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம், திருமுருகன் பூண்டி ஆகிய ஆறு நகராட்சிகளுக்கு உட் பட்ட அனைத்து வார்டுகள் மற்றும் அவிநாசி, மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம், சாமளாபுரம், சங்கராமநல்லூர், தளி, கன்னி வாடி, குன்னத்தூர், கொளத்துப்பாளையம், மூலனூர், ஊத்துக்குளி, முத்தூர், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 15 பேரூராட்சி களுக்கு உட்பட்ட அனைத்து வார்டுகள் ஆகி யவற்றைச் சேர்ந்த பொது மக்கள் விண்ணப் பம் வழங்கலாம். இரண்டாவது கட்ட முகா மிற்கு டோக்கனில் குறித்த நேரத்தில் பங்கேற்க இயலாதவர்கள் ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் முகாமில் கலந்து கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 லட் சத்து 18 ஆயிரத்து 344 குடும்ப அட்டைகள் உள் ளன. அனைவருக்கும் விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்படும். எனவே யாரும் ரேசன் கடைகளுக்கு வர வேண்டியதில்லை.  பொது விநியோகம் தடை படாதபடி விற்பனை யாளர்கள் டோக்கன் விநியோகத்தில் ஈடுபடு வார்கள். மாவட்ட நிர்வாகத்தில் இப்பணிக் காக மொத்தம் 7ஆயிரத்து 82 பேர் ஈடுபடுத்தப் படுவார்கள். 5 நியாயவிலைக் கடைகள், மையங்களுக்கு ஒரு மண்டல அலுவலர். 15  கடைகள், மையங்களுக்கு ஒரு கண்காணிப்பு  அலுவலர் என்று நியமிக்கப்பட்டு இப்பணி கள் மேற்பார்வை செய்யப்படும். விண்ணப்பம் பூர்த்தி செய்து பதிவு செய்த  பிறகு, மக்களுக்கு அவர்களது செல்போன்  எண்ணிற்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல் லது நிராகரிக்கப்பட்டது அல்லது போதுமான விபரம் இல்லை என்ற அடிப்படையில் குறுஞ் செய்தியாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.