districts

img

மகளிர் தின கருத்தரங்கம்

கோவை, மார்ச் 17 -  அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், சர்வதேச மகளிர்  தின கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ்  கிளப்பில் நடைபெற்ற நிகழ்விற்கு, மாவட்ட மகளிர் அமைப் பாளர் எ.பிரகலதா தலைமை ஏற்றார்.  இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எஸ்.ராஜலட்சுமி, அரசு ஊழியர் கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெகநாதன், பொரு ளாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில்,  பெண் ஊழியர்களை  மாலை ஐந்து மணிக்கு மேல் கட்டாயப் படுத்தி பணியமர்த்தப்படுவதை கைவிட வேண்டும். அனைத்து அலுவலகத்திலும் விசாகா கமிட்டி அமைத்து நடை முறை படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில், ஏ.அம்சவேணி நன்றி கூறினார்.