தருமபுரி, ஆக. 23- குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டு, கருக் கலைப்ப்பில் ஈடுபட்ட பெண்ணை தருமபுரி போலீ சார் கைது செய்தனர் கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தையின் பாலி னம் கண்டறியப்பட்டு பெண் குழந்தை என்றால் கருக் கலைப்பு செய்வதாக மாவட்ட ஆட்சிய ருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் வியழனன்று இரவு, தருமபுரி மாவட் டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டன அள்ளியில் இணை இயக்கு நர் மருத்துவர் சாந்தி, தலைமையில் மருத்து வர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்து சாமி உள்ளிட்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, அப்பகுதியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து சென் றதை கவனித்தனர். இவரை பின்தொடர்ந்து சென்ற மருத்துவக்குழுவினர், அந்த பெண் கர்ப்பிணி ஒருவர் வீட்டிற்கு சென்றதை உறுதி செய்தனர். பின்னர், சிறிது நேரம் காத்தி ருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்றனர். அங்கு கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள பெண் குழந்தையை கரு கலைப்பு செய்வதற் காக கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் கருக்க லைப்பு மாத்திரை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மாத்திரையை அப்புறப்படுத்தி விசாரிததில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமனமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும். தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருகலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து, கருகலைப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை மருத்துவ குழுவினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவரை காவல்துறையி னர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.