கோவை, மே 11- சகுனிகளும், கூனிகளும் இல் லாமல் மகாபாரதமும், ராமாயண மும் கிடையாது. ஆனால், அந்த பாத்திரங்கள் பெரிய அளவில் பேசப் படாது, அத்தகைய ஒருவர்தான் குரூமூர்த்தி போன்றவர்கள் என சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ் சாடினார். கோவையில், எழுத்தாளர் சுஜாதா சிவஞானம் எழுதிய, “குரு மூர்த்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் நிழல் அதிகாரம்” என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடைபற்றது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ் ணன், மக்கள் சிவில் உரிமைக் கழ கத்தின் தேசிய செயலாளர் ச.பால முருகன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் மலரவன், நூல் ஆசிரியர் சுஜாதா சிவஞானம் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். விழா வுக்கு பேராசிரியர் சே.கோச்சடை முன்னிலை வகித்தார். தமிழ் புலம் வெளியீடு சார்பில் தியாகரா ஜன் அறிமுக உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பங்கேற்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ் பேசுகையில், தமிழ் மக்கள் ஆப்பிரிக்கர்களை போன்றவர்கள் என குருமூர்த்தி பேசியதற்கு, தமிழர்கள் கவலைப் பட வேண்டியது இல்லை. ஒரு வேளை மோடியை போல என்று சொல்லி இருந்தால் கவலைப் பட்டு இருக்கலாம். அறிவியல் பூர்வ மாக மரபு வழியில் அது சரியான கருத்துதான். பிறப்பை நிறத்தோடு தொடர்புபடுத்தி பேசுகிறவர்கள் தான் நம்மை இழிவு படுத்துகிறார் கள். சகுனிகளும், கூனிகளும் இல் லாமல் மகாபாரதமும், ராமாயண மும் கிடையாது. ஆனால் அவர்க ளது கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படாது. அதுபோல, திருவாளர் குருமூர்த்தியின் பாத்தி ரம் இங்கு பத்திரிகையாளராக இல்லாமல் சகுனியாகவும், கூனி யாகவும்தான் இருந்திருக்கிறது. சாதி மற்றும் ஆதிக்க மனப் பான்மை குருமூர்த்தியின் குணம் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் தோன்று வதற்கு முன்பிருந்தே இந்த குணா திசயம் பலருக்கும் இருந்திருக்கி றது. மல்லையா, டாட்டா உள்ளிட்ட பல பெரும் முதலாளிகளுகளின் சொத்து பிரச்சனைகளுக்கு குரு மூர்த்தி பஞ்சாயத்து செய்து இருக் கிறார். இப்படிப்பட்ட நபர் எப்படி தேசபக்தி கொண்டவராகவும், தேச பக்தி கொண்ட அமைப்பைச் சேர்ந் தவராகவும் இருக்க முடியும். குரு மூர்த்தி போன்றவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடையாளம் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை என்ன? இது போன்ற புத்த கத்தை எழுத உதவிய கேரவன் இதழை பாராட்ட வேண்டும். காங் கிரஸ் முகமூடியில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழு வதுமே இருந்து கொண்டிருக்கி றார்கள். ரஜினி அரசியலுக்கு வரு வதாக சொன்னபோது அர்ஜுன மூர்த்தி என்பவர் உடன் இருந்தார். இப்போது அவர் பாஜகவின் அதிகா ரப்பூர்வ செய்தி தொடர்பாளர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக 444 சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் கள். இது மொத்த இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக் கையில் 11% ஆகும். இதில் காங்கிர ஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற வர்கள் 226 சட்டமன்ற உறுப்பி னர்கள். இது காங்கிரசின் தாங்கு திறனையும் பாஜகவில் வாங்கு திற னையும் வெளிப்படுத்துகிறது. அண்மையில் குஜராத் மாநிலத் தின் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தில் 4 விமானங் கள் மட்டுமே பயணிகளின் பயன் பாட்டுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில், ஐந்து நாட்களில் 600 விமானங்கள் வந்து சென்றன. இதனை பிரச்சனை இல்லாமல் இந்திய விமானப்படை அதிகாரி கள் சமாளித்தனர். நாட்டின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய வர்கள் அம்பானியின் வீட்டு திரும ணத்திற்கு வரும் பெரு முதலாளி களுக்காக வேலை செய்ய வைத் தார்கள். முதலாளித்துவம் என்ன வெல்லாம் செய்ய வைக்கும் என்ப தற்கு இந்த சம்பவமே உதார ணம். சிவசேனா முதல் அதிமுக வரை அவர்களோடு சேர்ந்தவர் களை உடைத்து காலி செய்து இருக்கிறார்கள்.
நரேந்திர மோடி இஸ்லாமியர்களை வீடு புகுந்து அடிக்க மட்டும் தான் சொல்ல வில்லை மற்ற அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகத்தை சார்ந்தவரின் கையை வெட்ட சொல்பவர் இந்தியாவின் எதிர்காலம் என்று சொன்னால் அது வக்கிரமும் வன்மமும் தானே. கொல்வது மட்டும் வன்முறை அல்ல, பிறப்பால் ஒருவரை சூத்தி ரன் என்று சொல்வதும் வன்முறை தான். மநு சொன்னதை ஏற்க வில்லை என்றால் எப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என எழுதினார் கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மூவர்ண கொடியை யும் இந்துக்கள் ஏற்கவும் மதிக் கவும் மாட்டார்கள் என எழுதியவர் கள் மநு நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார் கள். சங்பரிவார் கும்பலிடம் நேர் மையை எதிர்பார்க்க முடியாது. ஒரு நாள் நேர்மையாக பேசிவிட்டால் அவர்களால் தூங்க முடியாது. அரசியல் கட்சிகள் அந்நிய நிறுவ னங்களிடமிருந்து நிதி பெறக்கூ டாது என்பது சட்டமாக இருந்தது. இதுகுறித்து ஒரு அமைப்பு நீதிமன் றத்திற்கு சென்றது. பாஜக ஆட் சிக்கு வந்ததும், சட்டத்தை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார் கள். இவர்களுக்கு தேவைப்பட் டால் சட்டவிரோதமாக இருப் பதை சட்டமாக்கி விடுவார்கள். இது தான் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி என்பவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொடூர முகங்களில் ஒரு சிறிய உதாரணம்தான். சமூகம் சார்ந்த ஒவ்வொரு விடயங்களையும் எப்படி பகுத்தாய்வது என்பது குறித்து இந்த புத்தகத்தில் இருக் கிறது. இந்த புத்தகத்தை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண் டிய கடமை நமக்கு இருக்கிறது என்றார்.