கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கேன்டீன் செயல்படுகிறது. இந்த கேன்டீனுக்கு சாய் தள படிக்கட்டுகள் அமைக்கப்படாததால் மாற்று திறனாளிகள் செல்வதற்கு அவதிப்பட்டு வந்தனர். அப்படியான மாற்று திறனாளி ஒருவர் படியேற சிரமப்பட்டதை கண்ட வழக்கறிஞர் ஒருவர் தனது முகநூலில் தனது ஆதங் கத்தை பதிவு செய்திருந்தார். இதனை கண்ட உடனே கோவை வழக்கறிஞர் சங்கம் படிக்காட்டை இடித்து மாற்று திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக சாய்தள பாதையை தற்போது அமைத்துள்ளது. முகநூல் பதிவு என கடந்து செல்லாமல் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்கள் குவிகிறது.