நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பகுதியில் ஆயிரக் கணக்கான விசைத்தறிக்கூடங் கள் செயல்பட்டு வருகின்றன. விசைத்தறி தொழிலை நம்பி, நேரடியாகவும் மறைமுகமாக வும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழி லாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநி லங்களுக்கும் பெரும் பகுதி ஜவுளிகள் பள்ளி பாளையத்தில் உற்பத்தி செய்யபட்டு, ஏற்றுமதி செய்யப்படும். பள்ளிபாளையத்தில் விசைத் தறி தொழில் பிரதானமாக விளங்கி வரும் நிலை யில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாக துண்டு, லுங்கி, பாலீஸ்டர் ஜவுளிகள், காட்டன் பேண் டேஜ் துணிகள் எனப்படும் வெள்ளை பீஸ் ரக ஜவுளிகள், தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி, சேலை என எண்ணற்ற வகையிலான ஜவுளி கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி பாளையம், குமாரபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள், பன்னாட்டு கம்பெனி களின் பெயர்களை தாங்கி பல்வேறு நாடு களுக்கும் ஏற்றுமதி ஆகிறது என்பது குறிப் பிடத்தக்கது. தற்போது மாறி வரும் தொழில் சூழல், ஜவுளி தொழில் மீதான ஒன்றிய அரசின் கவன மின்மை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப் பிழப்பு நடவடிக்கை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், கடந்த ஐந்து ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளி தொழில் கடும் பின்னடைவை சந்தித்து வரு கிறது. அதேநேரத்தில் பொருளாதார தேவைக் கேற்ப ஊதியம் இல்லாததால், ஆரம்ப கால கட்டங்களில் இரண்டு, நான்கு விசைத்தறி களை இயக்கி வந்த தொழிலாளர்கள், தற் போது 12 முதல் 20 விசைத்தறிகளை ஒரு நபராக இயக்கி, ஒட்டுமொத்த குடும்பத்தின் பொரு ளாதார சூழலை சரி செய்ய போராடி வருகின்ற னர். அதிகப்படியான பணி காரணமாக, உடல் வலியை போக்க மது அருந்துவது, புகை பிடிப் பது உள்ளிட்ட காரணிகளால் 50 வயதிற்குள் ளாகவே உடல் நலக்குறைவால் தொழிலா ளர்கள் உயிரிழப்பு அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளாக, பள்ளிபாளையம், குமாரபாளை யம் மாறி வருகின்றது.
இந்நிலையில், ஜவுளிகள் தேக்கத்தால் விசைத்தறி கூடங்களுக்கு அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், விசைத்தறி தொழிலாளர் கள் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு உள் ளாகி வருகின்றனர். விசைத்தறி ஜவுளி உற் பத்தி செய்யும் சிறிய அளவிலான, அதாவது 10, 15 விசைத்தறிகள் என்ற அளவில் இயங்கும் விசைத்தறி கூடங்களில், ஏற்கனவே உள்ள ரகங்களுக்கு போதிய ஆர்டர்கள் இல்லாத தால், மாற்று ரக ஜவுளிகளை உற்பத்தி செய் வதில் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். அதனடிப்படையில் கேரள மாநிலத் தில் ஆகஸ்ட் இறுதியில் விசேஷமாக கொண் டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள சேலை தயாரிப்பு பணியில் தொழிலா ளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையத்தில் 20 விசைத் தறிகளை குத்தகைக்கு எடுத்து தொழில் நடத்தி வரும் சரவணன் என்பவர் கூறுகையில், கடைசி பத்து ஆண்டுகளில் விசைத்தறி ஜவுளி தொழி லில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால், தற் போது விசைத்தறி ஜவுளி தொழில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து ரகம் கிடைக்காதது, ஆர்டர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த காலங்களைவிட தற்போதைய சூழலை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஜவுளி நூல் விலை ஏற்றம், கட்டிட வாடகை அதிகரிப்பு, மின்சார கட்டணம் உயர்வு என பல்வேறு வகை களில் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதால், கூடு தல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் நீண்ட வருடங்களாகவே குறிப் பிட்ட ஒரு ஜவுளியை உற்பத்தியை செய்து வந்தோம். தற்போது பல்வேறு காரணிகளால் உற்பத்தி செய்த ஜவுளிகள் ஏற்றுமதி ஆகாத தால் மிகுந்த பொருளாதார பாதிப்பை சந்தித் ததால், வேறு வழி இன்றி அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கேரளா சேலை உற்பத்தியை துவக்கி உள் ளோம். தற்போது ஆகஸ்ட் மாத இறுதியில் கேர ளாவில் ஓணம் பண்டிகை துவங்க உள்ளதால், முன்னேற்பாடு பணிகளாக கேரள சேலை உற்பத்தியை அதிகப்படுத்தி வழக்கத்தை காட் டிலும், அதிகளவு கேரள சேலை ஜவுளிகளை கேரளாவிற்கு அனுப்பி வருகிறோம். சராசரி யாக மாதத்திற்கு 1000 முதல் 1200 சேலைகளை கேரளாவிற்கு அனுப்பி வருகிறோம். ஜவுளி உற் பத்திக்கு தேவையான அனைத்து ஜவுளி நூல் களும், நேரடியாக கேரளாவில் இருந்து எங்களுக்கு வாகனங்கள் மூலமாக அனுப்பப் படுகிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் கேரள சேலையை நாங்கள் முழுமையாக தயார் செய்து கேரளாவிலிருந்து வரும் வாகனத்தி லயே அனுப்பி விடுகிறோம். இப்படியாக நிலை மையை சமாளித்து வருகிறோம். சராசரியாக ஒரு சேலைக்கு ரூ.250 முதல் ரூ.300 ரூபாய் வரை விலை வைத்து நாங்கள் அனுப்பி வருகிறோம். மொத்த வியாபாரம் என்ப தால் நாங்கள் இந்த விலைக்கு கொடுக்கி றோம். பல்வேறு கட்டங்களை தாண்டி செல்லு வதால், கேரளாவில் கூடுதல் விலை வைத்து விற் கப்படலாம் என நினைக்கிறோம். தற்போதைய பொருளாதார தேவையை கேரள சேலை உற் பத்தி பணிகள் மூலமாக ஈடுகட்ட முடிவதால், தொடர்ந்து பணிகளை செய்து வருகிறோம். மேலும், மற்ற பொதுவான ஜவுளிகளை உற் பத்தி செய்வது போல கேரள சேலையை உற் பத்தி செய்வது அவ்வளவு எளிமையானது அல்ல.
அதற்காக பிரத்தியோகமான தொழிலாளர் கள், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்க ளைக் கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மீட்டர் சேலை வரும் என்பதால், டேமேஜ் ஏதும் இல் லாமல் சேலையை உற்பத்தி செய்ய வேண்டி யது மிக முக்கியமாக உள்ளது. தவறுதலாக ஜவுளி துணியில் ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டு விட்டால், ஒரு சேலை முழுவதுமே டேமேஜ் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் தான் இந்த தொழிலையும் மேற்கொள்ள வேண்டி இருக் கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் விசைத்தறி ஜவுளி தொழில் எப்படி இருக்குமோ? என அச்சத்துடனே தொழிலை செய்து வருகி றோம் என தெரிவித்தார். ஆதிமனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரை பல வகையில் பரிணமித்துள் ளது. மேலும், அழியாத நிலையில் இருக்கக் கூடிய, மனிதர்களின் மிக முக்கியமான பயன் பாடுகளில் ஒன்றாகிப் போன ஜவுளிகளை, ஜவுளி தொழிலை பாதுகாக்க தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிய, மாநில அரசுகள் திட்ட மிட வேண்டும் என்பதே விசைத்தறியாளர் களின் கோரிக்கையாக உள்ளது.