திருப்பூர், ஜூலை 26- திருப்பூரில் போக்குவரத்து நெருக்கடி மிக்க ஊத்துக்குளி சாலையின் நடுவே பிரதான குடிநீர் குழாய் திறக்கும் கேட் வால்வு சாலை மட்டத்தை விட சில அங்கு லம் மேலே நீட்டிக் கொண்டிருக்கி றது. மாதக்கணக்கில் இந்த இடத்தை கடக்கும் இருசக்கர வாக னங்கள், உடனடியாக கண்ணுக் குத் தெரியாதபடி நீட்டிக் கொண்டி ருக்கும், இந்த குடிநீர் குழாய் மீது ஏற்றி விபத்தில் சிக்கி வருகின்றன. எனினும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் அல்லது நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை என எந்த ஒரு அரசுத் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளா மல் கடந்து போகின்றனர். திருப்பூர் நகரின் பிரதான சாலை களில் ஒன்று ஊத்துக்குளி சாலை. இந்த சாலை வழியாகத்தான் ஊத் துக்குளி, ஈரோடு, சேலம் செல்வ தற்கான ஆயிரக்கணக்கான வாக னங்கள் கடந்து செல்கின்றன.அவ் வாறு செல்கின்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத் தும்படி, பாளையக்காடு எஸ்.ஆர்.சி மில் அருகே ரயில்வே மேம்பா லத்தின் அடிப்பகுதியில் இந்த குடி நீர் குழாய் கேட் வால்வு நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேட் வால்வு வழி யாக குடிநீர் கசிந்து, சுற்றிலும் உள்ள தார் சாலையில் அரிப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் குண்டும், குழியுமான சாலை ஒருபுறம், சாலை மட்டத்துக்கு மேலே நீட்டி கொண்டிருக்கும் கேட் வால்வு மறு புறம், என இவற்றுக்கு இடையே வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டி உள்ளது.மழைக்காலங்களில் குழி களில் தேங்கியுள்ள நீரினால் பல வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்திற்கு ஆளாகி உள்ளனர். நான்கு சக்கர வாகனங்களின் டயர்களும் சேதமடைந்து விடுகி றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி அவர் கள் மேற்கொள்ளும் பயணம் தடைப்படுகிறது. சீர்மிகு நகரம் “ஸ்மார்ட் சிட்டி” என்று ஒய்யாரமாக சொல்லிக் கொண்டாலும், திருப்பூர் மாநக ராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வழங் கல் அதிகாரிகளின் பொறுப்பற்ற பணிகளால் தினமும் பலர் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊத்துக்குளி சாலையை சமீபத் தில் தான் பராமரிப்பு செய்துள்ள னர். நெடுஞ்சாலைத் துறையினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக ளின் பணிகளாலும், விபத்தை தவிர்க்க வேண்டிய திருப்பூர் வடக்கு காவல்துறை அதிகாரிக ளும், அவ்வழியாக தினந்தோறும் பலமுறை ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்ற காவல்துறை அதி காரிகளும் ஏனோ இந்த நிலையை கண்டு கொள்ளவில்லை. மாநில அரசின் பல்வேறு பணி களான சாலைப் பராமரிப்பு, குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் தனி யார் ஒப்பந்த முறையில் மேற்கொள் ளப்படுகிறது. ஒப்பந்த முறையில் நடைபெறும் அனைத்து பணிகளும் தரமற்ற முறையில், முறைகேடு நிறைந்ததாக உள்ளது என்பது மக் கள் அறிந்த விஷயமே. திருப்பூர் நகரில் தினந்தோறும் பல இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்துகளினால் கடுமை யாக பாதிக்கப்பட்டு, உயிரிழந்தும் வரும் நிலையில், மேலே குறிப் பிட்ட இடத்தில் ஏற்படும் விபத்திற் கும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதம் அடைவதற் கும் திருப்பூர் மாநகரின் நெடுஞ்சா லைத் துறை அதிகாரிகளும், குடிநீர் வழங்கல் அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் தான் முழு பொறுப்பு என்று பொதுமக்கள் குற் றம் சாட்டுகின்றனர். எனவே ஊத்துக்குளி சாலை யில் குடிநீர் திறந்துவிடும் கேட் வால்வு, யாருடைய உயிரையா வது காவு வாங்கும் முன், மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர்.