அவிநாசி, பிப்.19 - காமராஜரை கொல்ல முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் தற் பொழுது அவிநாசியில் காமராஜ ருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது பொதுமக்கள் மத்தியில், முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா சிந்தனைக்கு எதி ரான கொள்கை கொண்டவர்களை பாஜகவினர் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசை யில் காமராஜரையும் விட்டு வைக்க வில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக காமராஜர் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். உட் பட சங்பரிவார் அமைப்புகள் பசு விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட் டனர். பசு வதைக்கு எதிராக உடனடி யாக சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை இந்திரா காந்தி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆர்எஸ்எஸ் உட்பட சங்பரிவார் அமைப்பினர் நாடாளுமன்ற வீதியில் உள்ள அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்க தொடங்கினர். அதேபோல காமராஜர் தங்கி இருந்த வீட்டின் மீது கற்களை வீசி, வீட்டிற்கு தீ வைக்க முயன்றனர். இதில் காமராஜர் தப்பித்து விட் டார். இப்படி காமராஜரை கொலை செய்ய முற்பட்ட ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பினர் தற் பொழுது, பாஜக கல்வியாளர் பிரி வின் சார்பில், காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பதும், அதில் பேச்சுப் போட்டி நடத்துவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். இது போன்ற செயல் களில் ஈடுபடும் பாஜகவினரின் செயல் வஞ்சக நோக்கம் கொண் டது. அவர்களின் இந்த ஏமாற்றுத் தனத்தை மக்கள் புரிந்து கொண்டு அவர்களை நிராகரிக்க வேண் டும் என்று காமராஜர் தொண்டர் கள் கூறினர்.