தருமபுரி, ஜன.4- தருமபுரி வனப்பகுதி அருகே உள்ள விளைநிலங் களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந் துள்ளனர். தருமபுரி அருகே வனத் தைவிட்டு வெளியே வந்த இரண்டு காட்டுயானைகள் கடந்த ஒரு வாரமாக கிராம பகுதிகளில் சுற்றிதிரிந்து வரு கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சோம்பட்டியிலுள்ள பவர்கிரீட் பகு திக்குள் புகுந்த இரண்டு காட்டுயானை களை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து மீண் டும் வெளியே வந்த இரண்டு காட்டுயானை களும் பேடரஅள்ளி, பள்ளிப்பட்டி, சோகத் தூர், நக்கல்பட்டி உள்ளிட்ட கிராமபகுதி களில் சுற்றிதிரிகிறது. தற்போது பாப்பாரப் பட்டி அருகே சாலையை கடந்து பனைக் குளம் ஏரியில் அருகே உள்ள பிக்கிலி ஏரி பகு தியில் உலாவும் காட்டுயானைகளை விரட்ட பாலக்கோடு, தருமபுரி வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். தற்போது ராகி, சோளம், கரும்பு, போன்ற விளைப்பயிர்களின் அறுவடை காலம் என்ப தால் விளைப்பயிர்களை உண்டு பழகிவிட்ட காட்டுயானைகள் மீண்டும், மீண்டும் வனத்தை விட்டு விளைநிலங்களுக்கு படை யெடுத்து வருகின்றன. எனவே, காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகாத வாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும், பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.