உடுமலை, ஜன.16- உடுமலை வளையபாளையம் பகுதியில் தென்னைமரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி உள் ளது. சேதப்படுத்தும் காட்டு விலங்கு களை கட்டுப்படுத்த சூரிய சக்தி மின் வேலி அமைக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். விவசாய விளை நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த சூரிய சக்தி மின் வேலி அமைக்க வனத்து றையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும். மலைப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள், பன்றிகள் உள் ளிட்ட காட்டு விலங்குகள் உணவு மற் றும் குடிநீர் தேவைகளுக்காக மலை அடிவார பகுதியில் இருக்கும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவது, இப்பகுதி விவசாயிகளைக் கவலையடைய செய்துள்ளது. மேலும், ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை, பொன்லாமன் சோலை, அம ராவதி உள்ளிட்ட பகுதியில் ஐம்பதுக் கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்குழாய்கிணற்றில் உள்ள குழாய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. ஏற்கனவே காட்டுப் பன்றிகள் மலை அடிவார பகு தியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்க லம் ஒன்றியப் பகுதிகளில் விவசாயி களை தாக்கி வருகிறது. தற்பொழுது காட்டு யானைகளும் விளைநிலங் களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறு கையில், காட்டுப் பகுதியில் உள்ள விலங்குகள் விளை நிலங்களுக்கு வரத் தொடங்கி உள்ளதால் வனத்து றையினர் மலை அடிவார பகுதியில் சூரியசக்தி மின் வேலிகளை அமைக்க வேண்டும். மேலும் யானை களை கட்டுபடுத்த அகலிகளை வெட்ட வேண்டும். விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என் றார்கள்.