districts

img

விவசாய பயிர்களை சேதப்படும் காட்டுயானைகள் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் ஆவேசம்

மேட்டுப்பாளையம், மே 15- மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து விவசாய பயிர்களையும், கால்நடை தீவனங்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன்  ஊரக பகுதிகளான தாசம்பாளையம், குருமபனூர், நெல் லித்துரை, தேக்கம்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங் களில் வனத்தைவிட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை  சேதப்படுத்தி வருவதால், பெருமளவில் விவசாயிகள் நஷ் டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கரும்பு, தென்னை உள்ளிட்ட பணப்பயிர்களை விளைவிப்பதை தவிர்த்து, கால் நடை தீவனங்களான சோளம், மக்காச்சோளம், சீமைப்புல் போன்றவைகளை பயிர் செய்து கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருகின்ற னர். இதுவரை பணப்பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகள், தற்போது தீவனப்பயிர்களையும் சேதப் படுத்த துவங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகள் தடுக்க தவறிய வனத்துறை கண்டித்து  அப்பகுதி விவசாயிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யம் முன்பு கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

;