திருப்பூர், ஆக. 25- திருப்பூர் மாநகராட்சியில் ரூ.54.60 கோடி மதிப் பீட்டில் பழைய பேருந்து நிலையத்தைப் புதுப் பிக்கும் பணிக்காக வெள்ளியன்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த அரசு நிகழ்ச்சிக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பரா யனை ஏன் அழைக்கவில்லை, என்ன காரணம் என்பதை உடனே தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.