உதகை, ஜன.22- 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களையும் உட்ப டுத்தி நல வாரியம் அமைக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் நீலகிரி மாவட்ட மாநாடு, எருமாட் டில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எல். சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா மாஸ்டர் வர வேற்புரை ஆற்றினார். பாபு அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். வேலையறிக்கையை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்வைத்தார். சங்கத்தின் உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன், கூடலூர் தாலுகா செயலாளர் சி.கே.மணி, எருமாடு தாலுகா செயலாளர் ராஜன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க செயலாளர் யோக கண்ணன், சிஐடியு மாவட்ட நிர்வாகி எம். ஆர்.சுரேஷ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். இம்மாநாட்டில், 100 நாள் வேலை திட் டத்தின், வேலை நாட்கள் 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தில் தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களையும் உட்ப டுத்தி நல வாரியம் அமைக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய கூலி நிலு வையை உடனடியாக வழங்கி, திட்டத்தை நகர் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்ற வேண்டும்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட ராஜரத்தினம், செயலாளராக பன்னீர்செல் வம், பொருளாளராக வி.ஏ.பாஸ்கரன், துணைத்தலைவராக சி.கே.மணி, துணைச் செயலாளராக எம்.கே.பாபு மற்றும் 6 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. முடிவில், விவசாய தொழிலாளர் சங் கத்தின் கோவை மாவட்ட செயலாளர் துரை சாமி நிறைவுறையாற்றினார். டி.கே.பிலிப் நன்றி கூறினார்.