கோவை, அக்.12- சூலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பதுவம்பள்ளி கிரா மத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் புதனன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்துகொண்டு ரூ.2 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகை யில், இலவச வீட்டு மனை பட்டா சமூக பாதுகாப்பு திட் டத்தின் கீழ் உதவித்தொகை குடும்ப அட்டை வேளாண்மை துறையில் மானிய தொகை தோட்டக்கலைத் துறையில் சார் பில் மானிய தொகை தனிநபர் கடன் உள்ளிட்டவை 514 பய னாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 முக்கியமான மக்கள் பிரச்சினைகள் குறித்து முதல்வர் உங் கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏக்களிடமிருந்து கேட்டிருந் தார். அதன்படி கோவை மாவட்டத்திலிருந்து 10 தொகுதி களில் உள்ள எம்.எல்.ஏக்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கோரிக்கையாக முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன் னும் 4 தினங்களில் முடிவடைந்து, சட்டமன்ற கூட்டத் தொட ருக்கு முன்பாக முதல்வரிடம் வழங்கப்படும். மேலும், அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக் கம் செய்ய வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நீர்வளத் துறை இடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் விரி வான நடவடிக்கை எடுக்க முதலிடம் கோரிக்கை மனுவை கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் பிரநிதிகள், துறைசார்ந்த அதி காரிகள் பங்கேற்றனர்.