கல்விக்கடனுதவி வழங்கும் விழா
கல்விக்கடனுதவி வழங்கும் விழா நாமக்கல், பிப்.15- நாமக்கல்லில் 172 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் கல்விக்கடனுதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், ஞானமணி கல்வி நிறுவனத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியவர் ச.உமா, தலைமையில் 172 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் கல்விக்கடனுதவிகளை வழங்கினர். இந்த விழாவில் பங்கேற்ற கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., கூறுகையில், கல்விக்கடன் பெறும் மாணவ, மாணவியர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் தீவிர முயற்சியி னால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்விக்கடன் என்பது மாணவ, மாணவியர்கள் பெறும் கடன் அல்ல அது அரசு மேற் கொள்ளும் ஒரு முதலீடு ஆகும். நீங்கள் பெறும் கல்விக் கடனை வேலைக்கு சென்றவுடன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி செலுத்திட வேண்டும், என்றார்.
வரி வசூல் மையத்தில் சர்வர் பழுது வரி கட்ட வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு
சேலம், பிப்.15- ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையத்தில் சர்வர் பழுதா னதால், வரி செலுத்த வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், ொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களில் குடிநீர், சொத்து, தொழில், கடை வாடகை, காலிமனை வரி உள்ளிட்ட வரிகள் என, மொத்தம் 59 ஆயிரத்து, 313 பேரிடமிருந்து, மொத்தம் 13.62 கோடி ரூபாய் வசூலாகிறது. இந்த வரிகள், கட்டுவதற்கு நகராட்சி அலுவ லகத்தில் கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில், தினமும் 150 முதல் 200 பேர், பல்வேறு வரி செலுத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சர்வர் பழுது ஏற்பட்டுள்ள தால் வரிகளை கட்ட வரும் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய வேலை உள்ளது. வரி செலுத்திவிட்டு வேறு பணிக ளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதே அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திலும், சர்வர் பழுது காரணமாக ஆதார் திருத்தம், புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், கணினி சேவை மையத்தில் புதிய தொழில்நுட்பத்துக்காக பணிகள் நடந்து வருவதால், சில மணி நேரம் சர்வர் வேலை செய்வதில்லை. விரைவில் சரி செய்யப்பட்டு தீர்வு காண்பதாகவும், ஓரிரு நாளில் சர்வர் சரி யான முறையில் செயல்படும் என கணினி தலைமை அலுவலக அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தனர்.
ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா
சேலம், பிப்.15- சின்னானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பலர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி, சின்னானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா, பள்ளி தலைமை ஆசிரியை வெங்கடேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி அங்கிருந்தவர்களின் கண்களை கவர்ந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ராஜா, ரோட்டாரி சங்க நிர்வாகிகள் செந்தில், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர். இவ்விழாவில் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் மாலதி, வட்டார வளர்ச்சி மேற்பார்வையாளர் காளியப்பன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மிளகு வியாபாரியிடம் ரூ.24 லட்சம் கொள்ளை 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
சேலம், பிப்.15- கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த மிளகு வியாபாரியிடமிருந்து பணம் கொள்ளையடித்த வழங்கில், 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளம் மாநிலம், வடகோடு துறை பகுதியைச் சேர்ந்தவர் வீரா சாமி. மிளகு வியாபாரியான இவர், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, நாமக் கல் மாவட்டத்தில் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மிளகு வாங்கி சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் மிளகு வாங்க ஏற்காடு, செம்ம நத்தம், பெரிய கடையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி யன்று, வீராசாமியை மிளகு வாங்க டெம்போவில் ஏற்காடு சண்முகம் அழைத்து சென்றார். அங்கு மிளகு கிடைக்கவில்லை. எனவே, கொல்லி மலைக்கு சென்ற நிலையில் அங்கே யும் இல்லாததால் சேலம் திரும்பி னர். கொல்லிமலைக்கு சென்று விட்டு சேலம் திரும்பிய போது, பனமரத்துப் பட்டி ஏரி அருகே சிறுநீர் கழிப்பதற் காக வண்டியை ஓரமாக நிறுத்தும்படி சண்முகம் தெரிவித்தார். அங்கு இறங் கிய சண்முகம் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்பொ ழுது அங்கு ஆம்னி வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீரா சாமியை தாக்கி விட்டு, அவர் வைத்தி ருந்த ரூ.24 லட்சத்தை கொள்ளைய டித்து சென்றனர். இதுகுறித்து வீராசாமி, பனமரத் துப்பட்டி காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய ஏற்காடு, வெள்ளக் கடை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கார்த்திக், இடைத்தரகர் சண்முகம் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்த னர். இடைத்தரகர் சண்முகம் போட்டு கொடுத்த திட்டத்தின் படி இந்த சம்ப வம் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இவ்வழக்கை விசா ரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர், கார்த்திக், சண்முகம் ஆகிய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் மூன்று பேருக்கு தண்டனை வழங்கிய நீதி பதி, ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுத்தர வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.15- நல்லம்பள்ளி அருகே மயானத் திற்கு செல்லும் பாதையை ஆக்கிர மிப்பிலிருந்து மீட்டுத்தர வேண்டும் என பட்டியலின மக்கள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மானியதஅள்ளி ஊராட்சிக் குட்பட்ட ஜருகு ஆதிதிராவிடர் காலனி யில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கான மயானம், காலனியையொட்டி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள் ளது. இந்த மயானத்திற்கு அரசு ஆவ ணப்படி முறையான வழி உள்ளது. இந்த வழிப்பாதையை, அதை ஊரைச்சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறையைச் சேர்ந்த குடும்பத்தினர், ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகி றது. இதனால் பட்டியலின மக்கள் வசிக் கும் குடியிருப்புகளில் மரணம் அடைந் தால், அவர்களை மேடு பள்ளமாக இருக் கும் விவசாய விளை நிலங்கள் வழி யாக எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், மழைக்காலங்களில் சேற்றில் இறங்கி சடலத்தை எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய் யும் அவல நிலை உள்ளது. ஆக்கி ரமிப்பில் உள்ள மயானப் பாதையை மீட்டுத்தரக்கோரி, அதே ஊரைச்சேர்ந்த ஒரு பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதி மன்றம் ஓராண்டுக்கு முன்பே அரசு ஆவணத்தில் உள்ளபடி, சம்மந்தபட்ட மக்களுக்கான மயானப் பாதையை வரு வாய்த்துறையினர் மீட்டு கொடுக்க வேண் டும் என உத்தரவிட்டது. ஆனால், இதுநாள் வரை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள மயானப் பாதையை மீட்டுத்தரவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவ னம் செலுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பிலுள்ள மயான வழிப்பா தையை விரைந்து மீட்டு தர வேண்டும். மேலும், இதற்கு துணைப்போன அதி காரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் தருமபுரி, பிப்.15- தருமபுரி பேருந்து நிலையம் அருகே சாலையில் வழிந் தோடும் கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் உள்ளது சின்னசாமி நாயுடு தெரு. இங்கு அதிகளவில் ஜவுளிகடை கள் உள்ளதால், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி யாகும். இத்தெருவில் பாதாள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாய் வழிந்தோடுகிறது. பல மாதங்களாகியும் அடைப்பை சீரமைக்காததால், பேருந்து நிலையத்தைச் சுற்றி ஆங்காங்கே கழிவுநீர் சாலையில் ஓடு வது வாடிக்கையாக உள்ளது. இதனால் நடந்துசெல்வோர் மிக வும் சிரமப்படுகின்றனர். மேலும், நடந்து செல்வோர் மீது வாகனம் கடந்து செல்லும்போது கழிவுநீர் தெறிக்கிறது. துர் நாற்றம் அடிப்பதால் நடந்து செல்வோரை முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் நக ராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதாளச் சாக்கடை அடைப்புகளை சீரமைத்து சுகாதாரத்தை உறுதிபடுத்த வேண்டுமென வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.
பட்டாசு விபத்தில் ஒருவர் பலி
பட்டாசு விபத்தில் ஒருவர் பலி சேலம், பிப்.15- சேலம் மாவட்டம், இரும் பாலை, கொல்லப்பட்டி இரு சாயி அம்மன் கோவில் திரு விழா அண்மையில் நடை பெற்றது. அப்போது, பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில், இலவம்பாளை யத்தைச் சேர்ந்த சக்திவேல் படுகாயமடைந்து 75 சதவிகி தம் தீக்காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில், வியாழனன்று சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரி ழந்தார்.
புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி: பிப்.15 முதல் மார்ச் 15 வரை செலுத்தப்படவுள்ளது
புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி: பிப்.15 முதல் மார்ச் 15 வரை செலுத்தப்படவுள்ளது திருப்பூர், பிப்.15- தேசியகால்நடை நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளில் புரூசெல்லோசிஸ் (கருச்சிதைவு) நோய்க்கான தடுப்பூசி (மூன்றாம் தவணை) செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்துள்ளதாவது, புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எரு மைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபார்டஸ் என்ற பாக்டீரியாவி னால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்ந டைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈனும் தருவாயில் (4 மாதம் முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்கு தல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு ஜூநோடிக் நோயாகும். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக மூன்றாவது தவ ணையாக, புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க் கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் பிப்.15 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூ சியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுக ளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். மேலும், காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது. ஆகவே 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூ சியை இலவசமாக கால்நடை நிலையங்கள் மூலமாக, நடை பெறும் முகாம்களில் செலுத்தப்படும். எனவே இந்த வாய்ப் பினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்ப டுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
100 நாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு
100 நாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு திருப்பூர், பிப்.15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு மாத கணக்கில் சம்பளம் வழங்காமல் உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றி உள் ளது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின், திருப்பூர் புறநகர் மாவட்டக் குழு கூட்டம் புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.சித்ரா தலைமையில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல் வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியான பயனாளிகளை கண்டறிந்து மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது, மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் தகுதியுள்ள பயனாளிகளிடம் உரிய விண்ணப்பங் களை பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப் பது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு மாதக் கணக் கில் சம்பளம் வழங்காமல் ஒன்றிய மோடி அரசு வஞ்சித்து வருகிறது. இந்த போக்கை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண் டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடல் சார் வணிகம் குறித்து கருத்தரங்கம்
கடல் சார் வணிகம் குறித்து கருத்தரங்கம் அவிநாசி, பிப்.15 அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் சர்வதேச வணிகத்துறை சார்பில் கடல் சார் வணிகம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோ. நளதம் தலைமை வகித்தார். கோவை கடல்சார் கல்லூரி மேலாண்மை துறை இயக்குநர் செந்தில்குமார் பேசினார். இதில் கடல் சார் வணி கம், கப்பல் வணிக வரலாறு, கப்பலில் உள்ள துறைகள், வேலை வாய்ப்பு, ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள், இறக்குமதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள், எதிர்கா லத்தில் கடல்சார் வாணிபத்தின் தேவைகள், அதன் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார். வணிகவியல் (சர்வ தேச வணிகம்) துறைத் தலைவர் செ.பாலமுருகன் நன்றி தெரி வித்தார். விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
117 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்
திருப்பூர், பிப்.15- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், எடையபாளை யம் கிராமத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப் பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று வழங்கினார். இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.16.79 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிக ளுக்கு ரூ.8.64 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.19,484 மதிப்பீட் டிலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 20 பய னாளிகளுக்கு ரூ.96,332 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.14.25 லட்சம் மதிப் பீட்டிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 பயனா ளிக்கு ரூ.63,000 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.70.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிக் கான காசோலைகளையும், தாட்கோ சார்பில் 3 பயனாளிக ளுக்கு ரூ.16.98 லட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11, 120 மதிப்பீட்டில் உபகரணங்களையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் 2005 தனிநபர் வேலைக்கான அட்டை பெறும் 5 பயனாளிகளுக்கு ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 117 பயனாளிகளுக்கு ரூ.1,30,55,554 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் வழங்கினார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைக ளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தலை வர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட் டம்) வரலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லர் குமாரராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, ஊத்துக்குளி வட்டாட்சியர் சரவணன், உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு
திருப்பூர், பிப்.15- கூட்டுறவுத் துறையின் கீழ் திருப்பூர் மங்க லம் சாலையில் செயல்பட்டு வரும் திருப்பூர் குமரன் மகளிர் கலைக் கல்லூரியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்குள்ள ஆடை வடிவமைப் புத் துறையின் சார்பில் பேஷன் எக்சலெட் 2024 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மூன்றாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு துறை மாணவிகள் 12 குழுக்களாக புதுவிதமான ரெட்ரோபேஷன், எத்தநிக் ஃபியூஷன், பேப்ரிக் மேனுபுலே ஷன், ரெட் கார்பெட் என 12 குழுக்களாக பல் வேறு தலைப்புகளில் ஆடைகளை வடிவ மைத்து காட்சியமைத்தனர். இதில் ஆடை வடி வமைப்பு துறை பேராசிரியரும் துறை தலை வருமான கற்பகம் சின்னம்மாள் நடுவராக இருந்து சிறந்த ஆடை வடிவமைப்பாளர் களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கினார். இதன் மூலம் மாணவிகளின் தனித்திறமை வளர்வதோடு சமூகத்தில் தங்கள் திற மையை வெளிக் கொண்டு வரவும், இது போன்ற நிகழ்ச்சிகள் உதவிக்கரமாக இருக் கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் தங்களை உற்சாகப் படுத்துவதோடு மட்டுமல்லாத சமூகத்தில் விரும்பக்கூடிய ஆடை வகைகள் என்ன என் பதை தாங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற் றவாறு வடிவமைப்புகளை உருவாக்க உத விக்கரமாக இருக்கும் என மாணவிகள் தெரி வித்தனர்.
தேசிய அளவிலான ரோபோடிக்ஸ் கண்காட்சி
கோவை, பிப்.15- இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் விதமாக கோவை யில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோபோடிக்ஸ் கண்காட் சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விண்வெளி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளை கண்டுபிடிப்பதில் உலக அளவில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வின்வெளி ஆராய்ச்சியில் தமிழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகம் உள்ளனர். இதனி டையே இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் விதமாகவும், ரோபோடிக்ஸ் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைக்கும் விதமாக கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவி லான ரோபோட்டிக்ஸ் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ ரேஸ், ரோபா சாக்கர், ட்ரோன் என புதிய கண்டுபிடிப் புகளை காட்சிப்படுத்தப்படுத்தி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து சிறந்த கண்டுபிடிப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பாராட் டுக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
மைவி3 ஏட்ஸ் உரிமையாளருக்கு மீண்டும் சிறை
கோவை, பிப்.15- கோவையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் விசாரணை நிறைவடைத்த நிலை யில், மீண்டும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வந்த மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் சக்தி்ஆனந்தன் குறித்து, கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நி லையில் தன் மீதும், மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மீதும் புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, அந்த நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடத்தினார். காவல் ஆணை யரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி காவல் ஆணை யர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடா மல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் பந்தயசாலை போலீசார் கைது செய்தனர். இதேபோல மற்றுமொரு வழக்கில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐந்து பேரை யும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி காவல்துறை யினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து சக்தி ஆனந்தனிடம் பந்தயசாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். புதன்கிழமை பிற்பகல் முதல் வியாழக் கிழமை பிற்பகல் வரை விசாரணை மேற்கொண்ட காவல்து றையினர், விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி னர். இதனையடுத்து, அவரை மீண்டும் நீதிமன்ற காவ லில் வைக்க 4 வது குற்றவியல் நடுவர் நீதிபதி சரணபாபு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
பயிர்களை சேதப்படுத்திய யானை
கோவை, பிப்.15- விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த போளு வாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது நல்லூர் வயல், சப்பாணிமடை கிராமங்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக அடிக்கடி ஒற்றை காட்டு யானை புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. செவ்வாயன்று நள்ளிரவில், மணிகண் டன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானை, தென்னை மரங்களை அடியோடு சாய்த்தது. இதேபோன்றூ, தங்க மணி என்பவரின் கரும்பு தோட்டத்தையும் சேதப்ப டுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினர். இந்நிலையில் விவசாயி மணிகண்டன் கூறுகையில், “எங்கள் கிராமங்களுக்குள் யானைகள் அடிக்கடி வரு கின்றன. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்த டங்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே காரணமாகும். வனத் துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து யானை வழித்தடங்களை மீட்க வேண்டும். எங்களது மொத்த உழைப் பையும் ஒரு நொடியில் யானைகள் வேரோடு சாய்த்து விடு கின்றன. நிவாரணமும் கிடைப்பதில்லை. சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
பூத்துக்குலுங்கும் அக்னி பூக்கள்
உதகை,பிப். 15- நீலகிரி மாவட்டத்தில், கால நிலைக்கேற்ப பல வண்ணங் களில் பூக்கும் வகைகளைக் கொண்ட மரங்கள் உள்ளன. தற் போது நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்க உள்ள நிலையில், முதுமலை புலிகள் காப் பகம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது, இந்த காலகட்டத்தில் அனைத்து மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து வறட்சி காணப்படும் நிலையில் இந்தியாவை தாய கமாகக் கொண்ட Flame of the forest எனப்படும் இளைப்புரசு மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அக்கினி பூ மரம் என அழைக்கப்படும் இவ்வகை மரங்களின் இலை கள் உதிர்ந்து நெருப்பு நிறத்தில் மலர்கள் மட்டும் பூத்துக் குலுங்கும். இரவு நேரங்களிலும், தூரத்திலிருந்து இவ்வகை மலர்களைப் பார்த்தால் வனப்பகுதிகளில் தீ எரிவது போல் காட்சி தருவதால் இம்மலர்களுக்கு அக்கினி பூ மலர்கள் என்ற பெயர் உள்ளது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த மலர்களில் அதிக அளவு தேன் இருப்பதால் தேனீக் கள், பறவைகளை ஈர்க்கும் மலராக உள்ளது. இவ்வகை மரங்கள் இருக்கும் இடத்தில் தேன் சிட்டு, கிளிகள் உள் ளிட்ட பலவகை பறவைகள் மற்றும் தேனீக்கள் தேன் எடுப் பதை நம்மால் காண முடிகிறது. தற்போது முதுமலை புலி கள் காப்பகம் உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப் பகுதிகளில் இவ்வகை மலர்கள் பூத்துக் குலுங்குவது பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பேக்கிங் கவர்களுக்கு அபராதம் விதிப்பதில்லை
உதகை,பிப். 15- நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் சோதனை என்ற பெய ரில் வணிகர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து மார்ச் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட் டம் நடத்த நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரவை அறி வித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்திக்குபிறப்பில், மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடைசெய்யப்பட்ட மற்றும் ஒரு முறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக்குகளை வைத்திருந்தால் மட்டுமே அபரா தம் விதிக்கபடுகிறது. உணவு பொருட்களை பேக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்தால் அபராதம் விதிப்பதில்லை. பிளாஸ்டிக் கவர்களை வாரத்திற்கு ஒரு முறை நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் சேக ரித்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித் துள்ளார். பிளாஸ்டிக் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாகவும் சாலை ஓரங்க ளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் அதிக அள வில் வீசபடுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கபட்டு வருவ தாக கூறிய மாவட்ட ஆட்சியர் அருணா தடை செய்யப் பட்ட பிளாஸ்டிகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பூட்டை உடைத்து திருட்டு
தருமபுரி, பிப்.15- தருமபுரி அருகே அடுத்த டுத்து எட்டு கடைகளில் பூட்டை உடைத்து கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி அருகே, சோகத் தூர் கூட்ரோடு மற்றும் குண் டல்பட்டி இரண்டு இடங்க ளில் பூட்டியிருந்த மெடிக் கல் ஸ்டோர், அக்ரோ சர் வீஸ், சலூன் கடை, ஈ சேவை மையம், இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை, ஹார்டு வேர்ஸ், என எட்டு கடைக ளின் பூட்டை உடைத்து இரவு நேரத்தில் திருட்டு நடை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடைகளி்ல் பொருத்தப்பட் டிருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றியுள்ள போலீசார் திருட்டு சம்பவத்தி்ல் தொடர் புடையவர்கள் குறித்து விசா ரணையில் ஈடுபட்டு வரு கின்றனர்.
பேருந்தை வழிமறைத்த யானை
பேருந்தை வழிமறைத்த யானை உதகை,பிப். 15- கெத்தை மலைப்பாதை வழியாக கோவை சென்ற அரசு பேருந்தை இரண்டு குட்டிகளுடன் ஜந்து காட்டு யானை கள் சாலை நடுவே மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப் பாதை வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் இரு குட்டிகளுடன் ஜந்து காட்டுயானைகள் சாலை நடுவை உலா வந்தது. நீண்ட நேரம் ஜந்து காட்டு யானைகளும் சாலை ஒரங்களில் முகாமிட்டது. இருப்பினும் யாருக்கும் எந்த இடையூறும் செய்யாத அந்த யானை கூட்டத்தில் இருந்த பெண் யானை இரு குட்டி, இரு பெரிய யானைகளையும் அழைத்து கொண்டு சாலை ஓரத்தில் இருந்த வனப்பகுதியில் சென்றது. இதனை தொடர்ந்து பேருந்து கோவை நோக்கி சென்றது. இதனால் கெத்தை மலைப்பாதையில் சிரிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் மின்கசிவால் தீ விபத்து
மே.பாளையம், பிப்.15- மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மின் கசிவு காரண மாக ஏற்பட்ட தீ விபத்தால், ஆவண அறையில் இருந்த பொருட் கள் அனைத்தும் எரிந்து சேதமானது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் இருந்த OHE என்னும் தானியங்கி சிக்னல் இயந்தி ரத்தில் அதிகாலை மூன்று மணியளவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரயில்நி லைய ஸ்டேஷன் மாஸ்டர் அறை மற்றும் மேல் தளத்தில் உள்ள ஆவணங்கள் வைக்கும் அறைகளில் தீ பரவி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தக வல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரயில் நிலைய அறை களில் இருந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்விபத்து காரணமாக ரயில் நிலையத்தில் மின்சா ரம் தடைப்பட்டது. மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவ லகத்தில் இருந்த பேனல் போர்டு, கணினிகள் மற்றும் பேட்டரி அதில் இருந்த ரெக்கார்டு நோட்டுகள் போன்ற பொருட்க ளும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகள் ரயில்வே காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த தீ விபத்து காரணமாக, சிக்னல் வேலை செய்யாத காரணத்தால் 12671 எண் கொண்ட நீலகிரி விரைவு வண்டி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுமார் 20 நிமி டங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது.
தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
உதகை,பிப். 15- உதகை நகராட்சியில் பணியாற்றும் ஒப் பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள் ளன. இந்த வார்டுகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை நாள்தோறும் நகராட்சி யில் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இம் மாதம் 15ஆம் தேதி ஆகியும் சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனையடுத்து, உதகை மார்க்கெட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட் டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் காலை முதல் உதகை நகரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டது. இத னையடுத்து நகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான் சூழல் நிலவியது.
சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டி 11 பதக்கங்கள் குவித்து அசத்திய கோவை மாணவர்கள்
கோவை, பிப்15- டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அள விலான கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்க ளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சார்பில் 3ஆவது சர்வ தேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பி யன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் துருக்கி, ரஷ்யா, மலேசியா, இந்தியா என 19 நாடுக ளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக கோவை யில் இருந்து ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமி மற்றும் பிரேம் எம்.எம்.ஏ.அகா டமியில் பயிற்சி பெற்று வரும் மன்சர், தார கேஸ்வரன், சஞ்சய், அபிஷேக், சிங்கதமி ழன், யஹாயா என ஆறு மாணவர்களும், அஷ்விதா என்ற ஒரு மாணவி உட்பட ஏழு பேர் கலந்து கொண்டனர். இதில் பாய்ண்ட் ஃபைட், லைட் காண் டாக்ட், கிக் லைட் மற்றும் ரிங் ஸ்போர்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்ட ஏழு பேரும் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 11 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். தமிழகத்தில் முதன் முறையாக இளம் நடு வராக ரிங் ஸ்போர்ட்ஸ் பிரிவில் கோவையை சேர்ந்த மிதுன் என்பவரும் பங்கு பெற்றுள் ளார். இந்நிலையில் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற் சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் மாணவ,மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், பூச்செண்டுகள் வழங்கியும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியா சார்பாக கலந்து கொண்டு நாட்டிற்கும்,தமிழ கத்திற்கும், பெருமை சேர்த்துள்ள கோவை கிக் பாக்சிங் வீரர்களை பலரும் பாராட்டி வரு கின்றனர்.