மலை ரயில் பயணிகளுக்கு வரவேற்பு
உதகை, செப்.27- உலக சுற்றுலா தினத்தை முன் னிட்டு, உதகை மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக் கப்பட்டது. சர்வதேச சுற்றுலா நகரமான உத கைக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதனை காண வெளி மாநி லங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணி கள் வருகின்றனர். இந்நிலையில், ஆண்டு தோறும் செப். 27ம் தேதியன்று உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுற்றுலா தினத்தன்று உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்பது வழக்கம். அதே போல், உதகையில், புதனன்று மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். தொடர்ந்து உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், சுற்று லாத்துறை அலுவலர் உமாசங்கர் வர வேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷனி தலைமை வகித்து பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, சுற்றுலா வளர்ச்சிக்காக உலகச் சுற்றுலா அமைப்பு 1970ஆம் ஆண்டு செப். 27 ஆம் தேதியன்று உலக சுற்றுலா தினத் தையொட்டி கொண்டாடப்படுகிறது. இம்முறை சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என விழா கொண்டாடப்படு கிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவ சாயம் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர பல்வேறு சுற்றுலா சார்ந்த தொழில் கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால், இம் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச் சியை மென்மேலும் மேம்படுத்துவோம் என்றார். இவ்விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து பிற்பகல் உதகை படகு இல்ல வளாகத்தில் நகராட்சி தலைவர் வணீஷ்வரி தலைமையில், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தூய்மை விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் சாம்சன் கனக ராஜ், சுற்றுலா துறை உதவி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருப்பூர், செப்.27 - திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து குழந்தைகளுடன் கலந்து ரையாடினார். தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத முன் னோடி மாநிலமாக மாற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்கன்வாடி மையங்கள் மூலம் ஆறு வயது வரையிலான குழந்தைக ளுக்கு முன்பருவக் கல்வி பயிற்றுவித்து அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சி யர் கிறிஸ்துராஜ் செவ்வாயன்று நேரில் ஆய்வு மேற்கொண் டார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச் சத்து உணவு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என வும், முன்பருவ கல்வி முறையாக பயிற்றுவிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளோடு அவர் கலந்துரையாடினார்.
திருப்பூரில் இன்று தமிழ்ச்சங்க இலக்கியப் பரிசளிப்பு
திருப்பூர், செப். 27 - திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் 2021 -2022ஆம் ஆண்டு வெளியான சிறந்த இலக்கிய நூல்களுக்கானப் பரிசளிப்பு விழா வேலாயுத சுவாமி திருமண மண்டபத்தில் வியாழ னன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் நீதிபதி மகாதேவன் பங்கேற்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப் புரை ஆற்றுகிறார். முதல் பரிசு ரூ.பத்தாயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும். இத்துடன் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும். கட்டுரை நூல்கள்: முதல் பரிசு தலைப்பு: நீர். ஆசிரியர்: ப.திருமலை. இரண்டாம் பரிசு: யானைகளின் வருகை. ஆசிரியர்: கா.சு.வேலாயுதன். சிறந்த நாவல் நூல்கள்: முதல் பரிசு: க்ளிக், ஆசிரியர்: மாதவராஜ், இரண்டாம் பரிசு: இராஜராஜ சோழன் ஆசிரியர்: மு.நாராயணன் (முகிலன்) சிறு கதை நூல்கள்: முதல் பரிசு: அரண்மனை வனம் ஆசிரியர்: இந்திநீலன் சுரேஷ். இரண்டாம் பரிசு: ஊடு இழை ஆசிரியர்: பல்லவி குமார். கவிதை நூல்கள்:முதல் பரிசு:கடவுளின் மர பணு கூடம் ஆசிரியர்: சின்மய சுந்தரன். இரண்டாம் பரிசு கவிப் பூங்காடு கவிதைகள் ஆசிரியர்: கொ.மா.கோதண்டம். இந்த எட்டு பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகி றது.திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர்ஆ.முருகநாதன், செய லாளர் மோகன் கார்த்திக் ஆகியோர் இத்தகவலைத் தெரி வித்தனர்.
உடுமலையில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
உடுமலை, செப்.27- உடுமலைப்பேட்டை தாலுக்கா பெதப்பம்பட்டியில் கால் நடை மருத்துவக் கல்லூரி மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிலை யத்தில் செயல்பட்டு வரும் கால்நடை சிகிச்சை வளாகத்தில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு புதனன்று, விழிப்பு ணர்வு கண்காட்சி மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் அனை வருக்கும் ஒன்று - ஒன்றே அனைவருக்கும் என்ற தலைப் பில் நடைபெற்றது. உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா.குமாரவேல் கண் காட்சியை துவக்கி வைத்து நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். கோயம்புத்தூர் நாய்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப் புரையாற்றினார். உடுமலைப்பேட்டை ஸ்டார் ரோட்டரி சங்கத் தின் செயலாளர் கே.கார்த்திகேய பிரபு கலந்து கொண்டு வாழ்த்துரை பேசினார். இந்நிகழ்ச்சியை பெதப்பம்பட்டி கால்நடை மருத்துவ வளாகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் துரை சந்திரசேக ரன் மற்றும் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் சு.கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்தனர். உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி துணைத்தலைவர் தற்கொலை
ஈரோடு, செப்.27- கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலை வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூ ராட்சியின் துணைத்தலைவராக சக்திகுமார் (39) செயல் பட்டு வந்தார். திமுகவைச் சேர்ந்த இவருக்கு மனைவி வனிதா, சஞ்சய் (14) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், சக்திகுமார் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள் ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில், சக்திகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்
சேலம், செப்.27- 20 ஆண்டுகளை கடந்து சிறைகளில் உள்ளவர்களை விடு தலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அஸ்தம்பட்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட் டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளை கடந்து சிறையில் உள்ளவர்களை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161 ஆவது பிரிவினை பயன்படுத்தி, தமிழக சட்ட மன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதி மற்றும் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய ஜனநா யக கட்சி சார்பில் சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செய லாளர் தமுமின் அன்சாரி, தமிழர் விடுதலை முன்னணி நிர்வாகி தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு
சேலம், செப்.27- தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அயோத்தியப்பட்ட னம் பேரூராட்சிக்குட்பட்ட மாசி நாயக்கன் பட்டி, காந்தி நகர் காலனி பகுதியில் ஆதிதிரா விடர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டிய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருகிலுள்ள சுவாமி கல்வி நிறு வனத்தின் உரிமையாளர் சுவாமிநாதன் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை கண்டித்தும், ஆக்கிரப்பு நிலத்தை மீட்டு, தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி அயோத்தியப்பட்டனம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் உண்ணாதவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் விசிக சேலம் மண் டல செயலாளர் இமயவர்மன், சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் காஜா மைதீன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விசிக சேலம் வடக்கு மாவட் டச் செயலாளர் தெய்வானை செய்தியாளர் களிடம் கூறுகையில், தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, சுவாமி நாதன் என்பவர் கல்வி நிறுவனங்களை கட்டி யுள்ளார். அவருக்கு ஆதரவாக தற்போது மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையி னரும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. நியாயம் கேட்டு போராடுபவர்கள் மீது காவல் துறையின் அடக்குமுறை ஏவப்படு கிறது. மேலும், இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் தலையீடு செய்து தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இதை மறுக்கும் பட் சத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடு வோம், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்டோ சங்க நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, செப்.26- சிஐடியு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை அமைப்புக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு குமார் (எ) வீரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத் (எ) கண்மணி, உதவித்தலைவர் அயுப்கான் ஆகியோர் சிறப்புரையாற் றினர். பிஎஸ்என்எல் மற்றும் சிஐடியு தலைவர்கள் சி.பரம சிவம், மயில்சாமி மற்றும் விவசாயிகள் சங்க குப்பு சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளைச் செயலா ளராக செந்தில்குமார், பொருளாளராக காசிலிங் கம் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். இதில் ஏராள மான ஆட்டோ தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.