districts

img

சேலத்தில் பளு தூக்கும் போட்டி

சேலம், அக்.13- சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கம்,  காட்டூர் சுவாமி விவேகானந்தா டிரஸ்ட் ஜிம், காட்டூர் ஸ்ரீ பால முருகன் அறக்கட்டளை திருமண மண்டபம் சார்பில் ஞாயிறன்று  மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க துணைத் தலைவர் சிவராமன் வரவேற்புரையாற்றினார். காட்டூர்  சுவாமி விவேகானந்தர் டிரஸ் ஜிம் நிறுவனர் மார்க்கோனி தலைமை வகித்தார். போட்டியினை அரசு கட்டிட ஒப்பந்த தாரர் முத்துசாமி தொடங்கி வைத்தார். காட்டூர் ஸ்ரீ பால முருகன் அறக்கட்டளை மண்டபம் செயலாளர்  ஜெயராமன்,  விவேகானந்தா ஜிம் துணைத்தலைவர் கணேசன்,  செயலாளர் கிருஷ்ணராஜ்,  தென்னிந்திய  பளு தூக்கும் சங்க பொறுப்பாளர் அருள்மணி, காட்டூர்  கணேசன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாவட்டம்  முழுவதுமிருந்து 40  பெண்கள் உள்பட 85 பேர் கலந்து கொண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.          

;