districts

img

மூடப்படும் விசைத்தறிக்கூடங்கள்: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறியாளர்கள்

கார்த்திக் மதிவாணன்

ஒன்றிய மோடி அரசின் அடுத்தடுத்த தாக்கு தல் காரணமாக விசைத்தறி தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தொ ழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விசைத் தறி தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒன்றிய மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை, இருக்கிற தொழிலையும் பாதுகாக்கும் கொள்கைகள் இல்லை. அனைத்து கார்ப்ரேட் ஆதரவு கொள்கையின் விளைவாக வேலையின்மை தலைவிரித்தாடுகிற நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி வேலையின்மைக்கெதிராக பெரும் போராட்டத்தை நடத்த உள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று (வியாழக்கிழமை) மாநி லம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற் கும் ரயில் மறியல் போராட்டம், ஒன்றிய அரசு அலு வலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடை பெறுகிறது. இதன் அவசியம் குறித்து விவரிக் கிறது இந்த கட்டுரைத்தொகுப்பு. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான துணிகள் விசைத்தறிகள் மூலம் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கோவை, அவி நாசி, மங்கலம், சோமனூர், தெக்கலூர், காரணம் பேட்டை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் விசைத்தறித் தொழிலே பெரும் பாலானோருக்கு வாழ்வாதாரமாக இருந்து  வருகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வரு கின்றன. சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் விசைத் தறிகள் மூலம் நெசவு செய்யும் தொழிலை மேற் கொண்டு வருகின்றனர். இவர்களிடம் உள்ள  விசைத்தறிகளை நம்பி நெசவு செய்யும் 2 லட் சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள னர். மேலும்,மில் தொழிலாளர்கள், சரக்கை ஏற்றி, இறக்குவோர், ஓட்டுநர்கள், பாவு நூல் கொடுப்போர் என மறைமுகமாக 3 லட்சத்திற் கும் மேற்பட்டோர் உள்ளனர். மொத்தம் 5 லட்சத் திற்கும் மேற்பட்டோருக்கு விசைத்தறித் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. தினந்தோறும் ரூ.50  கோடி மதிப்பில் சுமார் 1 கோடி மீட்டர் துணி உற் பத்தி செய்யப்படுகிறது.

மோடியின் படுபாதக செயல்

இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி தொழில் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்து வருகிறது. கூலி உயர்வு பிரச் சனை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு போன்றவை விசைத்தறி ஜவுளி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. நூல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 40 சதவிகித விசைத்தறிக்கூடங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. மோடி அரசின் பண  மதிப்பி ழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, கொரோனா என  அடுத்தடுத்த சிக்கல்களால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. தொழிலை சரிவர மேற் கொள்ள முடியாமல் ஏற்பட்ட நட்டம் காரணமாக, வங்கியில் பெற்ற நகைக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். நூல் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான விசைத்தறிக்கூடங்கள் முழு மையாக இயக்கப்படுவதில்லை. இதனால் குழந் தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங் கள், சீருடை, புத்தகங்கள் போன்ற செலவுக ளுக்கு என்ன செய்வது? என்று தெரியாமல் விழி  பிதுங்கி நிற்பதாகவும் வேதனை தெரிவிக்கின் றனர். விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க, விசைத்தறியாளர்களின் கடன்க ளுக்கு வட்டி சலுகை வழங்க வேண்டும். மேலும், தொழில் துறை வளா்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள் ளுபடி செய்ய வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை  தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைதரகர்களின்றி ஜவுளி உற்பத்தியாளா்கள் நேரடியாக துணிகளை விற் பனை செய்ய திருப்பூர், கோவை மாவட்டத்தின் மத்தியில் (பல்லடத்தில்) ஜவுளி சந்தை அமைக்க  வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு தங்கும் விடுதி அல்லது வீட்டுவசதியை ஏற் படுத்தி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை விசைத்தறியாளர்கள் முன்வைக்கின்ற னர். பண வீக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்த சர்வதேச நிகழ்வுகளின் தாக்கத் தால் உள்ளூர் ஜவுளி சந்தை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச ஆர் டர்கள் வங்கதேசத்துக்கு திரும்பி இருக்கின்றன. வங்கதேசத்துக்குத் தேவையான பின்னலாடை மூலப்பொருட்கள் 60 சதவிகிதம் இந்தியாவிலி ருந்தும், 40 சதவிகிதம் சீனாவில் இருந்தும் இறக் குமதி செய்யப்படுகின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி இந்தியாவுக்கு ஏற்றுமதி யாகி இங்கு விற்பனையாகிறது. இதற்காக வங்க தேசத்துக்கு இந்தியா வரிச்சலுகையும் வழங்கி யுள்ளது. இந்தியாவைக் காட்டிலும் கிலோ வுக்கு ரூ.50 துணி விலை குறைவு என்பதால், உள் நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை வங்க தேசம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜவுளித் தொழிலுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யாததால், இன்றைக்குப் பின் னலாடைத் தொழில் சரிவைச் சந்தித்து வருவ தாக திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தி யாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 55 சதவிகிதம் நூற்பாலைகள்  மூடப்படும் சூழலில் உள்ளன. இந்த நிலை  தொடர்ந்தால் நூற்பாலைகள், உற்பத்தியாளர் கள் மற்றும் அவற்றைச் சார்ந்த தொழில்துறை யினர் என பலரும் ஜவுளி மற்றும் பின்னலாடை தொழிலில் இருந்து வெளியேறும் நிலை விரை வில் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.