districts

img

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக நிற்போம்

கோவை ஜூன் 12- மதவெறி தீயை விசிறிவிட்டு குளிர் காய நினைக்கும் பாஜகவை விரட்டிவிட்டு சிறு பான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரை யாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் கோவை மாவட்ட 4 ஆவது மாநாடு, மலையாள சமாஜம் அரங்கில் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ். புனிதா மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கருப்பையா வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், சிறு பான்மை மக்களிடையே ஒன்றிய அரசு பார பட்சம் காட்டுகிறது. மதவெறி செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒரு பக்கம் கலவரத்தை தூண்டிவிட்டு மறுபுறம் மக்களின் மீது சுமைகளை ஏற்றுகிறது. இத் தகையவற்றை செய்யும், பாஜக அரசு  ஆட்சி பொறுப்பேற்றபோது, ரூ.420க்கு விற் பனை செய்து கொண்டிருந்த சமையல் எரி வாயு சிலிண்டர் விலை இப்போது, ரூ.1300 தொட்டிருக்கிறது. 60 ரூபாய்க்கு கிடைத்த  பெட்ரோல் இப்போது ரூ.100யை கடந்துள்ளது. மேலும், நாட்டின் பொதுத்துறைகளை விற் பனை செய்து சீரழித்து வருகிறது. 

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பொறுப்பேற்று அதற்குரிய தீர்வை  எட்ட வேண்டிய ஒன்றிய அரசு, தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் தன் தப்பித்துக் கொள்வது போல ஒரு முகாந்திரத்தை உரு வாக்க முனைகிறது. ஊழியர்களின் குறை பாடு தான் விபத்திற்கு காரணம் என தப்பிக்க பார்க்கிறது. ஒவ்வொரு துறைக்கும் வருகிற ஆபத்தை கண்டு கொள்ளாமல், இது நமக்கு இல்லை என நாம் விலகிச் சென்றால், அனைத்து பொதுத்துறைகளை இழந்து,  பணம் இருந்தால் மட்டுமே சேவைகளை பெற முடியும் என்கிற இடத்திற்கு மக்கள் தள்ளப் படுவோம்.  இந்து மதத்திலேயே பிரிவினைகளை உருவாக்கி, மக்களை பிரித்தாளுவது தான் பாஜகவின் பாசிச  முதலாளித்துவத்தின் முக் கிய நோக்கம். சிறுபான்மை மக்களின் நலன் கள் குறித்த நடவடிக்கைகள் அனைத்தி லும், மார்க்சிஸ்ட்  கட்சி உடன் நிற்கும். சிறு பான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் நிற்கும், என் றார்.  இதனைத்தொடர்ந்து, உப்பிலிபாளை யம் பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி கே. இசட் ஜலாலூதீன் இம்தாதி,  பள்ளபாளை யம் பங்குதந்தை எ.குழந்தைசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன், தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழுவின் மாநில துணைத்தலை வர்கள் என்.அமிர்தம், பி.மாரிமுத்து, சிபிஎம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.ஆர். முருகேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர்.  முடிவில், மாநாட்டில் 23 பேர் கொன்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், தலைவராக ஜெரோம் ரோட்டரிக்ஸ், செயலா ளராக ஏ.சாதிக்பாட்சா, பொருளாளராக எஸ். கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து, சிறுபான்மை  மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். முடி வில், மாவட்ட உதவிச்செயலாளரர் சி. லாரன்ஸ் நன்றி கூறினார்.